Showing posts with label Auditor Coimbatore. Show all posts
Showing posts with label Auditor Coimbatore. Show all posts

Thursday, 13 October 2016

கருப்பு பணம் வெளியே வந்ததா?

வருமான வரிக் கணக்கை சரி செய்து செலுத்தி தூக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள் என்ற வாசகத்தை கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வரை பல வகைகளில் கேட்க முடிந்தது. வருமானம் அறிவிக்கும் திட்டம் 2016 என்று அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தில் கணக்கில் காண்பிக்காத வருமானம் மற்றும் சொத்துகளை அறி வித்து கணக்கை சரிசெய்து கொள்ளும் வாய்பை அரசு அறிவித்தது. இந்தியா முழுவதும் சேர்த்து ரூ 65,000 கோடிக்கு மேல் கணக்கில் காண்பிக்காத பணமாக வரிதாரர்கள் அறிவித்துள்ளனர். இதற்கு முன் அரசாங்கம் 1997 ஆம் ஆண்டு VDIS தாமாக முன் வந்து வருமானத்தை அறிவிக்கும் திட்டத்தில் ரூ 30,000 கோடிக்கு மேல் வெளியே கொண்டுவரப்பட்டது. ஆனால் கடந்த பல அனைத்து திட்டங்களையும் ஏப்பம் விடும் வகையில் இந்தத்திட்டம் முழு வெற்றி அடைந்துள்ளது. பிரதமரும் நிதி அமைச்சரும் இதனை வெளிப்படையாக பிரகடனப்படுத்தியுள்ளனர்.

திட்டத்தின் பின்னணி என்ன?

உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் கடந்த சில ஆண்டுகளாக வருமான வரி செலுத்தாதவர்கள் மற்றும் வெளி நாட்டில் கருப்புப்பணம் வைத்திருப் பவர்கள் பற்றி அடிக்கடி கேட்டு வந்தது. இதன் அடிப்படையில் தோற்று விக்கப்பட்டது தான் சிறப்புப் புலனாய்வு குழு (Special Investigation Team). உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, வருமான வரித்துறை முன்னாள் தலைவர் ஆகி யோரை உள்ளடக்கிய இந்தக்குழு பல வகைகளில் வரி ஏய்ப்புத்தகவல்களைத் திரட்ட வருமான வரித்துறைக்கு உத்தர விட்டனர்.

1997 க்கு பிறகு சுமார் 20 ஆண்டுக்குப் பின் வருமானம் அறிவிக்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. அசுர வேக தொழில் நுட்ப வளர்ச்சி,அதிக அளவில் வளர்ந்து வரும் சேவைத்துறை, உடனடியாகக் கிடைக்கும் தகவல்கள் போன்ற நவீன வசதிகளை வருமானவரித் துறையும் பயன்படுத்த ஆரம்பித்தது. தற்போது திட்ட உள்நோக்கு (Project Insight), சென்றடை முறை (Reach Out)) என்கிற முறை மற்றும் 360 டிகிரி நோக்கு (PROFILE) என்கிற முறைகளில் ஏராளமான தகவல்களை வருமான வரித் துறை திரட்டினர். தகவல் திரட்டல் இரண்டு வகைகளில் தீவிரப்படுத்தப்பட்டது. அகழவும் உழு மற்றும் ஆழ உழு என்ற பழமொழியைப் போல புதிய வரிதாரர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், ஏற்கெனவே உள்ள வரிதாரர்கள் அதிக வரி செலுத்தும் (WIDENING & DEEPENING) முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
வருமான வரித்துறை பல வகைகளில் சேகரிக்கத் துவங்கிய வரி ஏய்ப்புத் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. இந்தச் சூழ்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டு கணக்கு விவரங்களை HSBC வங்கி ஊழியர் பிரான்ஸ் நாட்டில் கசிய விட்டது, பனாமா பேப்பர் ஊழல் போன்ற வெளிநாட்டுச் சொத்து சம்பந்தமான விவரங்களும் வெளிச்சத்துக்கு வந்தன. இதனால் மத்திய அரசு கடந்த ஆண்டு வெளிநாட்டுச் சொத்துகளை அறிவித்து அதற்கு வரி மற்றும் அபராதமாக 60% செலுத்தி இந்தியாவிற்குள் கொண்டு வந்து விடலாம் என்று செயல்பட்டது. ஆனால் இத்திட்டம் நினைத்த அளவு வெற்றியடைவில்லை. இந்த பின்னணியில்தான் கடந்த பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் உள்நாட்டு கருப்புப் பணத்தை வெளிக் கொண்டு வரத் திட்டங்கள் அறிவிப்பதாகக் கூறினார்.

கொல்கத்தா பங்குச்சந்தையில் சில கம்பெனிகள் மூலம் வரி இல்லா லாபம் ஈட்டியவர்கள், போலி ரசீது கம்பெனிகள், மருத்துவக்கல்லூரி துவங்கியவர்கள், போன்ற 7 வகை தகவல்களைத் திரட்டி ஆதாரங்களுடன் நிதி அமைச்சகத்திடம் கொடுக்கப்பட்டது. உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்காமல் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்ற யோசனையை மத்திய அரசு பரிசீலித்தது. அதன் அடிப்படையில் பிறந்ததுதான் ஐடிஎஸ் எனும் வருமானம் அறிவிக்கும் திட்டம் 2016.

திட்டத்தின் செயல்பாடுகள்

இத்திட்டத்தில் கணக்கில் காட்டாத நிலம், வீடு, பங்குகள், பரஸ்பர நிதி, தங்கம், வைரம் போன்ற விலையுயர்ந்த உலோகங்கள்,ரொக்கப் பணம், பினாமி பேரில் உள்ள சொத்துகள் ஆகியவற்றை அறிவித்து அதற்கான வரி மற்றும் அபராதத் தொகையை செலுத்த வேண்டும். இவ்வாறு அறிவிக்கப்பட்ட வருமானத்திற்கு 30% வரி, 7.5% அபராதம் மற்றும் க்ருஷி கல்யாண் செஸ் ஆக மொத்தம் 45% கட்டி மற்ற விசாரணையில் இருந்து தப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது.
கணக்கில் காண்பிக்கப்படாத வருமானம் மற்றும் சொத்து குறித்த விவரங்களை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் குறிப்பிட்ட படிவம் 1-ல் வருமான வரி முதன்மை ஆணையரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தனது ஒப்புதலை முதன்மை ஆணையர் படிவம் 2 ன் மூலம் கொடுப்பார். அறிவிக்கப்பட்ட வருமானத்திற்கான வரியை செப்டம்பர் 2017 க்கு முன் தவணை முறையில் செலுத்த முடியும்.

எப்படி சாத்தியமானது?

கடந்த ஜுன் மாதம் முதலே வருமான வரி இலாகா திட்டம் வெற்றி அடைய அனைத்து முயற்சிகளையும் எடுக்க ஆரம்பித்தது. CARROT AND STICK என்று சொல்லப்படும் முறையைக் கையாண்டது. ஆரம்பத்தில் ஏராளமான விழிப்புணர்வு கூட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் தனி நபர் சந்திப்பு போன்ற பல வகைகளில் வரிதாரர்களுக்கு திட்டம் பற்றி எடுத்துரைத்த வருமான வரி இலாகா கடைசி மாதத்தில் பல அதிரடி சர்வே நடத்தியது. மும்பையில் முன்னணி நகைக்கடைகள் உட்பட 2000க்கும் மேற்பட்டோரிடம் சர்வே நடத்தியதில் வரிதாரர்கள்,அரசாங்கம் இத்திட்டத்தின் மேல் வைத்திருக்கும் முக்கியத்துவத்தை உணர முடிந்தது. ஆடிட்டர்களும் தங்களது முழு ஒத்துழைப்பையும் முயற்சிகளையும் கொடுத்து அவர்களது வாடிக்கையாளர்களுக்கு விளக்கியது, இந்தத் திட்ட வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம். ஆரம்பத்தில் மந்தமாகத் துவங்கிய இந்தத் திட்டம் கடைசி 3 நாட்களில் சூடு பிடித்து அரசாங்கம் எதிர்பார்த்ததை விட மிக அதிக அளவில் ரூ. 65,000 கோடிக்கு மேல் கணக்கில் காண்பிக்காத வருமானமாக அறிவிக்கப்பட்டது. தமிழ் நாட்டில் மட்டும் ரூ.3,000 கோடிக்கு மேல் வருமானமாக அறிவிக்கப்பட் டுள்ளது.

கட்டாதவர்களுக்கு இனி என்ன ஆகும்?

அளிக்கப்பட்ட வாய்ப்பைப் பயன் படுத்த தவறிய வரி ஏய்ப்பாளர்களுக்கு சற்று கடினமான காலமாகத்தான் இருக்கும். கையில் இருக்கக் கூடிய வரி ஏய்ப்புத் தகவல்களை வைத்து வருமான வரி இலாகா தீவிர நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது. தவிர பினாமி சம்பந்தமான விசாரணையை இனிமேல் வருமானவரி இலாகாதான் செய்யும் மேலும் சிறப்புப் புலனாய்வு குழு ரூ.15 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக வைத்து கொள்ளக்கூடாது, ரூ.3 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக வங்கியிலிருந்து எடுக்க முடியாது, விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் போது வரிப் பிடித்தம் போன்ற பல வகையான பரிந்துரைகளை செய்துள்ளது. இவற்றில் சில நடைமுறைக்கு வந்தாலும், வரி ஏய்ப்பாளர்களுக்கு சிரமம்தான்.

அரசியல்வாதிகள் நிலை

அரசியல்வாதிகளை வருமான வரி இலாகா ஒன்றும் செய்வதில்லை என்கிற கருத்து பொது மக்களிடையே நிலவி வருகிறது.ஆனால் சமீபகாலமாக சில அரசியல்வாதிகள், மாஜி மந்திரிகளை யும் வருமான வரி இலாகா தேடுதல் நடத்த ஆரம்பித்துள்ளது, சரியாக வரி கட்டுவோருக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. சமீபத்திய வருமானம் அறிவிப்புத் திட்டத்தின் கீழ் அரசியல் வாதிகளும் அதிகார வர்க்கத்தினரும் தங்களது கணக்கில் காட்டப்படாத வருமானத்தை அறிவிக்க முடியாது. காரணம், ஊழல் தடுப்புச்சட்டப்படி இப்படிக் காண்பிக்கப்படும் பணம் 100% அரசாங்கத்தை சேரும் மேலும் சிறை தண்டனைக்கு உட்பட்ட குற்றமாகக் கருதப்படும்.

திட்டம் வெற்றியா?

அரசாங்கம் நினைத்ததை விட அதிக அளவு வருமானம் காண்பிக்கப் பட்டது நிச்சயமாக திட்ட வெற்றி என்று கொள்ளலாம். பிரதமரும் நிதி அமைச்சரும் திருப்தியைத் தெரிவித் திருக்கும் வேளையில் வருமான வரி இலாகாவிற்கு இது ஒரு புது உந்து தலையும் உத்வேகத்தையும் கொடுத்து இருப்பது உண்மை. இனி வரும் பயணம் சரியான திசையில் இருக்கும் என்கிற நம்பிக்கையில் உள்ளனர்.

Author CA G Karthikeyan FCA can be reached at karthikeyan.auditor@gmail.com.


https://goo.gl/J5z1ng




Tuesday, 31 May 2016

City biz-men say Union budget gave them little reason to rejoice

City businessmen feel there's  not much that this union budget has to offer for industries . besides the employee provident fund scheme and the excise and customs duty relaxation, industries don't get any significant benefits.

The textile industry , which is the significant contributor to the country's gross domestic product , and accounts for over 35% of the country's textile exports , feels that no big announcements impacting the industry were made in the budget. "The focus was on agriculture and the rural sector, So, the budget did not have many announcements for the textile sector," said vice-chairman of Indian Technical Textiles Association , S K Sundaraman.

Industrialist say that the 2 % relaxation of excise and 2.5% in customs will bring some relief for them. " We had hoped for some relief in the export segment. Exports from Tiruppur and Coimbatore are significant , and any policy easing export of goods or relaxing norms would benefit the textile industry," said a textile entrepreneur requesting anonymity. " the Rs. 1,840 crore allocation for the textile industry is insufficient as there are backlogs for more than nine months. It will be difficult to hope for any development with the funds allocated, " said the industrialist.

Automobile and manufacturing and pump industries too are in a fix. "several automobile parts are exported from the city. While the announcements to improve the road and rail infrastructure will speed up the transport of good from the city to the ports, decisions at the policy level would have 
brought relief to industrialists." president of Indian chamber of commerce , D Nandakumar told TOI.

Chartered accountant, G Karthikeyan ,  who moderated a panel discussion organized by the Confederation of Indian Industries on Tuesday , said that while the allocations for the industries was good, " is important to see how the government implements the schemes and how well it monitors the process." He also said that the cesses levied by the government in various forms increases the compliance cost. " Industries feel that if there is uniformity in levying cess , it will provide some relief to them," he said.

பட்ஜெட் எதிர்பார்த்ததும், கிடைத்ததும்

பட்ஜெட்டுக்கு முன்னால் தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வு அறிக்கை, நாட்டின் பொருளாதார நிலை குறித்த தகவல்களை தருவதுடன், பட்ஜெட்டுக்கு ஒரு முன்னோட்டத்தை அறிவிக்கும் விதமாகவும் இருக்கும். ரூபாய் 1 லட்சம் கோடி மானியத்தில், பெரும்பான்மையான தொகை வசதி படைத்த பணக்காரர்களுக்குத்தான் சென்று அடைகிறது மற்றும் 7வது ஊதிய கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த சுமார் ரூபாய் 1.2 லட்சம் கோடி அளவில் தேவைப்படுகிறது என்றும் அதில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த பட்ஜெட்டில் 9 தூண்கள் என்று விவசாயம், ஊரகத்துறை, சமூக நலத் துறை, கல்வித் துறை, கட்டமைப்பு, நிதித் துறை சீர்திருத்தம், எளிதாக வர்த்தகம் புரிதல், வரி சீர்திருத்தங்கள் என்று பிரித்து ஒவ்வொரு துறைக்கும் முக்கியத்துவம் கொடுத்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி வரம்பு உயர்த்தப்படும் என்று ஏராளமானவர்கள் எதிர்பார்த்த நிலையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வருமான வரிப் பிரிவு 87ஏ யின் கீழ் ஆண்டுக்கு ரூபாய் 5 லட்சத்துக்கும் குறைந்த வருமானம் உள்ளோருக்கு கூடுதலாக ரூ.3,000 மட்டும் வரிச்சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. வருமான வரி விகிதங்களில் மாற்றம் ஏதும் இல்லை.

நிதி அமைச்சரின் சிரமம் புரிகிறது. இந்திய மக்கள் தொகையான 125 கோடியில் சுமார் 5% மட்டுமே வரி செலுத்துவதாக உள்ள நிலையில் வரி வரம்பை உயர்த்த முன் வரவில்லை.

உத்தேச வரி

சிறு மற்றும் நடுத்தர தொழில் புரிவோருக்கு உதவும் வகையில் வருமான வரிப்பிரிவு 44ADன் படி 2 கோடி ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்பவர்கள் கணக்கு புத்தகம் ஏதும் பராமரிக்கப்பட வேண்டியதில்லை. உத்தேச வரியாக விற்பனையில் 8% லாபமாக காண்பித்து அதற்கான வரியை செலுத்தினால் போதுமானது. அதேபோல புரபஷனல்ஸ் என்று சொல்லக்கூடிய மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள் போன்றோர் தங்களது மொத்த வருமானம் ரூ.50 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால் உத்தேச வருமானமாக 50%-ஐ காண்பித்து அதற்கான வரியை செலுத்தினால் போதுமானது. கணக்கு புத்தகம் ஏதும் பராமரிக்கப்பட வேண்டியதில்லை. இந்த வரம்பிற்கு கீழ் லாபம் காட்டினால் கட்டாய தணிக்கை செய்ய வேண்டும்.

நிறுவன வரி (Corporate Tax)

வரும் ஆண்டுகளில் மானியங்கள் குறைக்கப்பட்டு வரி விகிதமும் குறைக்கப்படும் என்று ஏற்கனவே அரசு அறிவித்து இருந்தது. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி செலவுக்கணக்கில் முழு சராசரி (weighted average) யாக, நிதியாண்டு 2016-17 க்கு 150% ஆகவும் 2017-18 க்கு 100% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. துரிதத் தேய்மானம் காற்றாலை (windmill) போன்ற சில இயந்திரங்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த துரிதத் தேய்மானம் (Accelerated Depreciation) 2017 ஏப்ரல் 01 லிருந்து அதிகபட்சமாக 40% ஆக மட்டுமே அனுமதிக்கப்படும். 2020 மார்ச் 31 வரை நிறுவப்படும் சிறப்பு ஏற்றுமதி மண்டல (SEZ) தொழில் நிறுவனங்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.

புதிதாக அதாவது 01.03.16 க்கு பிறகு உற்பத்தி செய்ய நிறுவப்படும் நிறுவனங்களுக்கு வருமான வரி 25% குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிறுவனங்கள் துரிதத் தேய்மானம் மற்றும் முதலீட்டு சலுகைகள் எடுத்துக் கொள்ள முடியாது. இந்த ஆண்டிலிருந்து ரூபாய் 5 கோடிக்கு மிகாமல் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு வருமான வரிவிகிதம் 29% குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனங்களுக்கு வரி மற்றும் கூடுதல் வரியும் பொருந்தும்.

ஸ்டார்ட்அப் (Start-up) நிறுவனங்கள்
புதிய தொழிலதிபர்களை உருவாக்குவதில் முனைப்பு கொண்டிருக்கும் இந்த அரசு 2016 ஏப்ரல் 01 முதல் 2019 மார்ச் 31 வரை நிறுவப்படும் நிறுவனங்களுக்கு, அதாவது 5 ஆண்டுகளில் முதல் 3 ஆண்டுகள் 100% லாபத்திலிருந்து விலக்கு கொடுக்க வகை செய்துள்ளது. ஆனால் இந்த நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச மாற்று வரி பொருந்தும் (minimum alternative tax).

பட்டியலிடப்படாத (Unlisted) நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யும்போது ஏற்படும் லாபத்திற்கான நீண்டகால மூலதன ஆதாயம் 3 ஆண்டிலிருந்து 2 ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது. வியாபாரத்தை எளிதில் துவங்கும் வகையில் நிறுவனங்கள் ஒரே நாளில் பதிவு செய்ய கம்பெனி சட்டத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

கருப்புப்பணம்

தாமாக முன்வந்து கணக்கில் காண்பிக்காத பணத்தை 45% வரி மற்றும் உபரித் தொகையாக செலுத்தும் பட்சத்தில் எந்தவித கேள்வியும் அபராதமும் சிறை தண்டணையும் இல்லாமல் ஏற்று கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார். இத்திட்டம் 01.06.15 முதல் 30.09.16 வரை நடைமுறையில் இருக்கும். இந்த திட்டத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றாலும் இதனை அதிகம் பேர் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புண்டு.

டிவிடெண்ட் விநியோக வரி
பட்டியலிடப்படாத (Unlisted) நிறுவனங்களின் பங்குதாரர்களுக்கு கொடுக்கப்படும் டிவிடெண்ட் தொகைக்கு டிவிடெண்ட் விநியோக வரி (Dividend Distribution Tax) நிறுவனம் கட்ட வேண்டும். அதில் ஒரு மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்படி அளிக்கப்படும் டிவிடண்ட் தொகை ரூ.10 லட்சத்திற்கு அதிகமாகும் பட்சத்தில் இதை பெறும் பங்குதாரர்கள் 10% வரி கட்ட வேண்டும். இந்த மாற்றத்தால் பங்கு சந்தையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

வரி சீர்திருத்தங்கள்

வருமான வரி கட்டுபவர்களுக்கான நடைமுறைகளை சுலபமாக்கும் வகையில் இமெயில் மூலமாக கேள்விகள் கேட்கப்பட்டு வருமான வரிக் கணக்கை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்தியாவில் 7 பெரு நகரங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்த உள்ளது.

வருமான வரி அதிகாரங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது, அபராத தொகையாக காண்பிக்கப்படாத வருமானத்திற்கான வரியாக 100% லிருந்து 300 % வரை விதிக்க வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது.

தற்போது இது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தங்களது வருமானத்தை குறைவாக காண்பிக்கும்பட்சத்தில் அபராத தொகை 50% ஆகவும், வருமானத்தை உண்மைக்கு மாறாக தவறாக காண்பிக்கப்படும் பட்சத்தில் அபராதமாக 200% ஆகவும் மாற்றப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பில் ஈடுபடுவோருக்கு இது பலத்த அடியாக இருக்கும்.

வருமான வரி மேல் முறையீட்டுக்கு செல்பவர்களுக்கு சில சாதகமான நடைமுறை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வரித் தொகையில் 15% கட்டினால் மேல் முறையீடு முடியும் வரை நிறுத்திவைக்க (Stay) கொடுக்க வரி அதிகாரிகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக உலக அளவில் பேசப்பட்டது வோடாபோன் நிறுவன வருமான வரி வழக்கு. இந்த வழக்கிற்கு பிறகு வருமான வரிச்சட்டத்தில் வரிப்பிரிவு 9-ல் கொண்டு வரப்பட்ட மாற்றம் பழைய ஆண்டுகளுக்கும் பொருந்தும் என்று கூறியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த பட்ஜெட்டில் பழைய ஆண்டுகளுக்கான சட்டத்தில் கணக்கை மறுபரிசீலனை செய்தால் வருவாய் செயலர் தலைமையில் உள்ள உயர்நிலை கமிட்டியின் ஒப்புதலுக்குப் பின் தான் செய்ய முடியும் என்ற மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த பட்ஜெட் வெகு ஜனங்களுக்கும், கீழேயுள்ள நடுத்தர மக்களுக்கும் ஏற்ற வகையில் தாக்கல் செய்யபட்டுள்ளது. 9 தூண்களுக்கான திட்டங்கள் சரியான முறையில் செயல்படுத்தப்பட்டால் நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும் என்பதில் சந்தேகம் இல்லை.
karthikeyan.auditor@gmail.com

Stress on Monitoring, Implementation

The Union Government should have a road-map for implementation of the projects, in the nine major areas, proposed in the Union Budget, according to speakers at a panel discussion, which was a part of the session on post budget analysis, organised by the Confederation of Indian Industry – Coimbatore Zone here on Wednesday ( Coimbatore , march 2 , 2016) .

Chartered accountant G. Karthikeyan, who was the moderator for the panel discussion, said the expectations from the budget were high this year and though it is not a populist one, it is seen as a “pro-poor budget”.

While the allocations for sectors such as agriculture, rural, and infrastructure are welcome measures, the Government should develop a mechanism to monitor and implement the proposals.

It should have a road-map for each of the major sectors that the budget gives thrust to.

K. Ilango, former chairman of CII – Coimbatore Zone, said the government has increased allocation for rural sector, and agriculture.

But the delivery mechanism needs to be improved so that the benefits reach the targeted beneficiaries.
When the country is moving towards Goods and Services Tax, the taxation system is only getting complicated for those in business.

The budget does not seem to encourage the manufacturing sector, though the government is focusing on Make in India.

IT entrepreneur N.K. Anand said the contribution of IT and ITES to the economy is huge though it employs less than 1 per cent of the population.

Growth

Substantial growth in the economy in the last one year is because of this sector and the budget is positive for the IT and ITES segments.

According to S.K. Sundararaman, former chairman of CII – Coimbatore Zone, when the global economy is going through a phase of slowdown, the focus of the budget should have been on industries.
The textile industry is going through unprecedented sluggishness and the budget does not have much for the sector.

C. Ramasamy, former Vice-Chancellor of Tamil Nadu Agricultural University, said that there are some positive developments in the budget for the agricultural sector.
In the last two years the sector did not attract attention. Now, there is a change as there is thrust on agriculture.

Though it is one of the main areas that the government has given attention to, income of the farmers should grow by 20 per cent every year.

In the last few years, the sector has grown by just about 3 per cent annually.
The allocation for segments such as research and development, and organic farming should have been more.

Monday, 6 January 2014

Roll-back of taxes - possible?

Article in Nanayam Vikatan dated 29/12/2013 by CA G Karthikeyan FCA:

வருமான வரி ரத்து...
நடைமுறையில் சாத்தியப்படுமா?

வருமான வரி இல்லாத நாடுகளின் வரிசையில் இந்தியா வருமா?

'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வருமான வரி, உற்பத்தி வரி, விற்பனை வரி விதிப்பை ரத்து செய்வோம்' என்று பா.ஜ.க தலைவர் நிதின் கட்காரி கூறியது வியாபாரிகளிடமும், தொழில்புரிவோர்களிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய பொருளாதாரச் சூழ்நிலையில் உற்பத்தி வரி, விற்பனை வரி மற்றும் வருமான வரி ஆகியவற்றை ரத்து செய்வது நடைமுறைச் சாத்தியமா என்பது பெரிய கேள்வி. முதலில், குறைந்தபட்சம் வருமான வரியையாவது நம்மால் ரத்து செய்ய முடியுமா என்பது குறித்து ஆராய்வோம்.
வரி விதிப்பு ஏன்?
வருமான வரி, மத்திய விற்பனை வரி மற்றும் உற்பத்தி வரி ஆகிய மூன்றும் இந்தியாவின் கடந்த ஆண்டு பட்ஜெட் வருவாயில் 50 சதவிகிதத்துக்கும் மேல் திரட்ட வழிவகுத்தது. இதனைக்கொண்டு  நாட்டின் அபிவிருத்தி, பாதுகாப்பு மற்றும் இதர அரசு திட்டங்களுக்கு செலவிடப்படுகிறது.
உலக நாடுகளில், வளரும் நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளில் 96 சதவிகிதத்துக்கு மேற்பட்ட நாடுகளில் வருமான வரி இன்றும் நடைமுறையில் இருந்துவருகிறது. 'வரிச் சொர்க்கம்’ என்று சொல்லப்படும் வருமான வரி இல்லாத நாடுகள் இயற்கைவளம் அல்லது எண்ணெய் வளம் மிகுந்ததாகவும், குறைவான மக்கள்தொகையுடனும், வருமான வேறுபாடு அதிக அளவில் இல்லாததாகவும் உள்ளது. இதனால், வருமான வரி இல்லாமல் இந்த அரசுகள் செயல்பட முடிகிறது.  
மொரீசியஸ், சைப்ரஸ், கேமன் தீவுகள், பஹாமா போன்ற சில நாடுகள் தங்கள் நாட்டின் மூலம் மற்ற நாடுகளுக்கு முதலீடு செய்ய சேவை வழிவகுக்கும் கேப்பிட்டல் கெய்ன் டாக்ஸ் மற்றும் இதர வரிகளை ரத்து செய்துள்ளன. இதனால் ஏற்படும் வருமானத்தை மனதில் கொண்டு வருமான வரியை முற்றிலும் ரத்து செய்துள்ளன.
மாற்றுத் திட்டம் என்ன?
வருமான வரி, உற்பத்தி வரி போன்ற வரி விதிப்பினால், அரசாங்கம் ஆண்டுக்கு சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் பெறுகிறது. இந்த வரிகள் ரத்தானால், இந்த வருவாய் நமக்கு வராமலே போகும். இதனை சரிக்கட்ட பா.ஜ.க தலைவர் சொல்லும் மாற்றுத் திட்டம், செய்யப்படும் செலவுகள் அல்லது வங்கிப் பரிவர்த்தனைகள்மேல் 1.5% வரி விதிப்பு செய்வதுதான். இதனைச் சுருக்கமாக, 'செலவு வரி’ என்று சொல்லலாம். இதனால், ஆண்டுக்கு 40 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானமாகக் கிடைக்கும் என்று கணிக்கப்படுகிறது. 'இது வரி விதிப்பைவிட சில மடங்கு கூடுதலான வருமானமாகும்’ என்கிறார் பா.ஜ.க தலைவர்.
மாற்றுத் திட்டத்தின் சவால்கள்!
தற்போதுள்ள வருமான வரி விதிப்பானது, அதிக வருமானம் உள்ளவர்கள் அதிகவரி கட்டவும்; குறைந்த வருமானம் உள்ளவர்கள் குறைந்த வரி கட்டும் வகை யிலும் ஏற்படுத்தப்பட்ட முற்போக்கான வரிவிதிப்பு (Progressive Taxation) முறையாகும்.
ஆனால், செலவு வரி என்பது எல்லாவித செலவுகளுக்கும் அனைத்து மக்களாலும் செலுத்தப்படவேண்டிய வரி. அம்பானி முதல் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் வரை ஒரே விகித வரியைச் செலுத்தவேண்டும். இதனால், ஏழைகள் அதிக ஏழைகளாகவும்; பணக்காரர்கள் அதிக பணக்காரராகவும் மாறவே  வாய்ப்பு அதிகரிக்கும். இதனால், ஏழை - பணக்காரர் வித்தியாசம் பெருகவே செய்யும்.  
வருமான வரிச் சட்டப் பிரிவுகளின்படி, 20,000 ரூபாய்க்கு மேல் கடனாகக் கொடுப்பது, பெறுவது மற்றும் கொள்முதல் செய்வது போன்றவை தவிர்க்கப்படவேண்டிய விதிகளாக தற்போது உள்ளது. வருமான வரிச் சட்டமே ரத்து செய்யும்போது, எப்படி வங்கிப் பரிவர்த்தனைகளை வங்கிகள் மூலம் அமல்படுத்தி அதற்கு வரி விதிக்க முடியும் என்பது ஒரு கேள்விக்குறி.
வருமான வரி நாட்டின் வருவாயாக மட்டும் அல்லாமல், பணச்சலவை மோசடி மற்றும் தீவிரவாதிகளின் செயல்கள் ஆகியவற்றைக் கண்காணிக்க ஏதுவாகும் சட்டமாக இருந்து வருகிறது. இதற்கு மாற்றுத் திட்டத்தில் எப்படி சட்டத் திருத்தம் செய்யப்படும் என்கிற விளக்கம் இல்லை.
ஜிஎஸ்டி (Goods & Services Tax) என்ற வரியை அமல்படுத்த அரசாங்கம் இவ்வளவு ஆண்டுகள் எடுத்துவரும் நிலையில், நீண்டகாலமாக இருந்துவரும் வரிகளை முற்றிலும் நீக்கி, புதிய செலவு வரித் திட்டத்தை ஏற்படுத்தி அமல்படுத்துவது என்பது ஒரு கானல் நீர்போல உள்ளது. புதிய வரிச் சட்டத்தை ஏற்படுத்தி அதை நடைமுறைக்கு கொண்டு வருவது அதிக குளறுபடிக்கே வழிவகுக்கும்.
அரசு நிர்வாகக் குறைகளை அகற்றுவது, குறைந்த வரி விதிப்பு, தொந்தரவில்லாத வரி வசூலிப்பு, வசூலித்த வரியை சரியான முறையில் செலவிடுதல் போன்ற சாத்தியமான மாற்றங்களைச் செய்தாலே போதுமே!

Friday, 26 April 2013

Home loan, tax & necessity - Article in The Hindu Habitat dtd 04/27/2013




Home. No matter who we are or where we are, the word immediately brings to mind recollections of childhood, school, homework, parties and quite a few other memories. A lot of factors go into the decision making process which ends in the purchase of a house. Considering that it is perhaps one of the biggest personal financial investments that any person would make during their lifetime, the decision is not easy to make.


India may be a vast country but most people prefer to stick close to their roots. Language and culture barriers ensure long distance migration is almost never considered. In countries such the U.S., people easily migrate from the east coast to the west because language and culture barriers are almost non-existent. Add to this the fact that the style of living, resources available etc also remain uniform throughout the country. This is also the reason why real estate prices do not vary much in the U.S. In India, however, the real estate market is booming and land prices are at an all-time high. The global market is currently in recession and the effects are rippling and spilling over into the Indian economy as well, slowly but surely. The government has also provided some tax sops to make home buying an attractive proposition even during a recessionary phase.
The Finance Bill 2013 has an additional proviso for first time home buyers (provided the property is self-occupied) in the form of section 80 EE of the Indian Income Tax Act. The concept of first-time homebuyer tax benefits is borrowed from the U.S. This section provides the following:
1. Loan amount should be less than or equal to Rs. 25 kakh while the value of the property should be less than or equal to Rs. 40 lakh.
2. The loan should be disbursed during the current financial year (01-04-2013 to 31-03-2014).
If the above conditions are satisfied, the said buyer may take an additional deduction of Rs. 1 lakh for interest paid on loan under section 80EE. In case the buyer is not able to claim the whole benefit of deducting Rs. 1 lakh under section 80 EE, he also has the option of carrying forward the balance interest for a claim in the succeeding financial year. This is in addition to the standard home loan interest deduction allowed of Rs. 1.50 lakh under section 24(b) if the house is self-occupied and there is no upper limit of deduction of interest in case of the property let out.
G. Karthikeyan,
Chartered Accountant, Coimbatore.



Sunday, 30 December 2012

How to bring back black money stashed offshore to India?


கறுப்புப் பணம்.. பொது மன்னிப்புதான் தீர்வு!


இந்தியாவிலிருந்து இதுவரை வெளியேறிய கறுப்புப் பணத்தின் அளவு பல லட்சம் கோடி ரூபாய் என சமீபத்தில் ஒரு தகவல் வெளியாகி எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
கிட்டத்தட்ட 150 நாடுகளில் கணக்கெடுப்பு நடத்திய நியூயார்க்கைச் சேர்ந்த குளோபல் ஃபைனான்ஷியல் இன்டெக்ரிட்டிஒவ்வொரு நாட்டிலிருந்தும் இதுவரை வெளியேறிய கறுப்புப் பணம் எவ்வளவு என்கிற புள்ளிவிவரங்களை வெளியிட்டிருக்கிறது. இந்த ரிப்போர்ட்படி, 2010-ல் மட்டும் ரூ.8,720 கோடி கறுப்புப் பணம் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறதாம். 1947முதல் 2010-ம் ஆண்டுவரை மொத்தமாக சுமார் ரூ.12,64,400 கோடி (232 பில்லியன் டாலர்)  கறுப்புப் பணம் வெளிநாடு களுக்குப் போயிருப்பதாகச் சொல்லி இருக்கிறது.
வெளிநாடுகளில் கறுப்புப் பணம் வைத்திருப்போர் பட்டியலில் சீனா மற்றும் மெக்ஸிகோ நாடுகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ள நிலையில் இந்தியா எட்டாம் இடத்தில் உள்ளது. அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் பெறும் லஞ்சம் மற்றும் ஊழல் பணம்சில பெரும் தொழிலதிபர்கள் வரி ஏய்ப்பு செய்து சேர்க்கும் பணம் போன்றவைதான் கறுப்புப் பணமாக  வெளிநாட்டு வங்கிகளில் தஞ்சம் அடைகிறது. எதிர்காலத்தில் அரசியல் மற்றும் வியாபாரத் தேவைக்கு பயன்படும் என்கிற நோக்கத்தில்தான் இந்தப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளுக்குக் கொண்டுபோய் பதுக்கி வைக்கிறார்கள். ஆனால் இந்த பணம்பல சமயங்களில் எடுக்கப்படாமல்,யாருக்கும் பயன்படாமல் போய்விடுவது கொடுமையான விஷயம். இந்தப் பணத்தை இந்தியாவுக்கு சரியாக கொண்டுவர முடியும்பட்சத்தில் மின் உற்பத்திஉள்கட்டமைப்பு,சுகாதாரம்கல்வி போன்ற பல முக்கியத் திட்டங்களுக்கு அதிக அளவில் செலவுசெய்ய முடியும்.  
மீட்பது சாத்தியமா?
வெளிநாடுகளில் இருக்கும் கறுப்புப் பணத்தை மீட்பது இரண்டு விதங்களில் சாத்தியப்படலாம். ஒன்றுதீவிர அரசாங்க நடவடிக்கை மூலம் பிற நாடுகளுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டு மீட்க முயற்சி செய்வது.  இரண்டாவதுபணத்தைக் கொண்டு சென்றவர் தாமாகவே முன்வந்து இந்தியாவிற்குள் மீண்டும் கொண்டுவர வாய்ப்பு அளிப்பது.
இந்தியாவில் கடந்த முப்பது ஆண்டுகளில் மூன்றுமுறை 'தாமாக முன்வந்து வரிச் செலுத்தும்திட்டங்களை வருமான வரித்துறை அறிமுகப்படுத்தியது. கடைசியாக 1997-ல் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தில் Voluntary Disclosure of Income Scheme (VDIS) சுமார் 3,50,000வரிதாரர்கள் கிட்டத்தட்ட ரூ.7,800 கோடி கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வந்து அதற்கான வரியைச் செலுத்தினார்கள்.  
இவை அனைத்தும் உள்நாட்டில் இருக்கும் கறுப்புப் பணத்தை வெளிக் கொண்டுவர அறிவிக்கப்பட்ட திட்டங்கள். இதுவரை வெளிநாட்டில் இருக்கும் கறுப்புப் பணத்தைக் கொண்டுவர எந்த திட்டமும் போடப்படவில்லை. ஆனால்வெளிநாடுகளில் இது மாதிரியான முயற்சிகள் நடந்திருக்கின்றன. ஜெர்மனியானதுவெளிநாட்டில் ஏதும் சொத்துக்களையோ அல்லது பணத்தையோ வைத்திருந்தால் அவற்றுக்கான வரி கட்டிசிறைத் தண்டனையிலிருந்து விடுபடும் திட்டத்தை அறிவித்தது. ஜெர்மனியைத் தொடர்ந்துஇங்கிலாந்துபிரான்ஸ்,அமெரிக்காபோர்ச்சுகல்இஸ்ரேல்கிரீஸ்தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இத்தகையத் திட்டத்தை அறிமுகம் செய்து கணிசமான வரிப்பணம் வசூலித்தன.

குறிப்பாகஅமெரிக்கா இத்திட்டத்தை எப்படி செயல்படுத்தியது என்று பார்ப்போம். அமெரிக்க பிரஜை  ஒருவர்வெளி நாட்டில் தன் மீதோ அல்லது தன் கையப்பத்தில் செயல்படுத்தப்படும் வங்கிக் கணக்கிலோ அல்லது நிதிச் சொத்தாகவோ 10,000 டாலருக்கு அதிகமாக வைத்திருந்தால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30-ம் தேதிக்கு முன்பு திஙிகிஸி படிவம் தாக்கல் செய்வது அவசியம். இதை செய்யத் தவறினாலோவெளிநாட்டு வருமானம் அல்லது சொத்துக்களை அறிவிக்காமல்விட்டாலோ அதிகபட்சமாக ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.
அமெரிக்காவில் ஒபாமா பதவியேற்றபின் 2009 மற்றும் 2011 ஆண்டுகளில் OVDI (Offshore Voluntary Disclosure Initiative), OVDP (Offshore Voluntary Disclosure Programme)  என்னும் திட்டங்களை அறிமுகப்படுத்தினார். இந்த 'பொது மன்னிப்புத் திட்டத்தில்’  (Amnesty)  தாமாக முன்வந்து இதுவரை கணக்கில் காண்பிக்காதச் சொத்துக்களை காட்டிவரி மற்றும் வட்டி செலுத்தும்பட்சத்தில் அமெரிக்க வருமானவரித்துறை (IRS)அதிகபட்ச அபராதமாக சொத்து மதிப்பில் 25 சதவிகிதத்தை விதித்துசிறைத்தண்டனை ஏதும் இல்லாமல் மன்னித்து விட்டுவிடுவது இத்திட்டங்களின் அனுகூலம்.
இத்திட்டங்கள் வந்தபிறகு சுமார் 33,000 பேர் கிட்டத்தட்ட பில்லியன் டாலர் அளவிற்கு வரி மற்றும் அபராதத்தைச் செலுத்தினார்கள். மேலும்இத்திட்டத்தை மூன்றாவது முறையாகத் தொடர்ந்து இந்த ஆண்டு அமெரிக்க அரசாங்கம் மீண்டும் அறிமுகப்படுத்தி இருப்பதைப் பார்க்கும்போது இதன் முக்கியத்துவத்தையும் வெற்றியையும் புரிந்துகொள்ளலாம். இத்திட்டங்களில் கிரிமினல் சட்டத்திற்குப் புறம்பான வருமானம் அதாவதுதுப்பாக்கி வியாபாரம்,போதை மருந்து கடத்தல் ஆகியவற்றுக்கு மன்னிப்பு வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் முடியுமா?
2012 பட்ஜெட்டில்இந்தியாவில் உள்ள வரிதாரர்கள் வெளிநாட்டில் உள்ள சொத்துகள் மற்றும் வெளிநாட்டு வருமானம் குறித்து விவரம் தெரிவிக்கவேண்டும் என சொல்லப் பட்டாலும்,அதனால் பெரிய மாற்றம் ஏதும் வந்துவிடவில்லை.
கறுப்புப் பண பதுக்கல் பேர்வழிகள்வெளிநாடுகளில் வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை இந்தியாவிற்குள் கொண்டுவந்து அதற்கான வரி மற்றும் அபராதம் செலுத்த பொது மன்னிப்பு வழங்கலாம். உதாரணமாக, 70 சதவிகித வரி கட்டினால் போதும்சிறைத் தண்டனை எதுவும் இல்லை என்று அறிவிப்பதன் மூலம் பலரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் இந்தியாவை விட்டு வெளியே எடுத்துச் செல்லப்பட்ட கறுப்புப் பணம் மீண்டும் இந்திய மண்ணுக்குள் வரும் வாய்ப்பு உருவாகும்.
இப்படி ஒரு நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தால்பலரும் குறை சொல்வார்கள்விமர்சனம் செய்வார்கள்.
ஆனாலும்அது பற்றி கவலைப்படாமல் பொது மன்னிப்பு அளிப்பதன் மூலம் சில லட்சம் கோடிகளாவது நமக்குக் கிடைக்கலாம். அதனைக்கொண்டு நம் நாட்டின் அடிப்படைத் தேவைகள் பலவற்றை நிறைவேற்ற முயற்சிக்கலாமே!