Tuesday 16 February 2016

Budget 2016-17 - What should the Central Government do?

2016-17 ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்?

ஆடிட்டர். ஜி. கார்த்திகேயன், கோவை
 
'' வீட்டுக் கடனுக்கான வட்டி தற்போது, வீட்டில் வசித்தால் இருந்தால் ரூ. 2 லட்சம் வரையிலும்,  வாடகைக்கு விட்டிருந்தால்  வரம்பு ஏதும் இல்லாமல் வட்டியை மொத்த வருமானத்தில் இருந்து கழித்து வரிச் சலுகை பெறலாம். வீட்டில் குடியிருந்தாலும் வரம்பு ஏதும் இல்லாமல் வட்டியை வருமானத்தில் இருந்து கழிக்க அனுமதிக்க வேண்டும்.  வீட்டை கடன் வாங்கி கட்டினால், அல்லது வாங்கினால் கட்டுமானக் காலத்தில் வட்டியை தற்போது வருமானத்தில் இருந்து கழிக்க அனுமதிக்கப்படுவதில்லை.
 
உதாரணமாக ஒரு ஃப்ளாட் ஒன்றுக்கு முன்பணம் கொடுத்து பதிவு செய்து அந்த ஃப்ளாட் கட்டப்படும் நிலையில் அதற்காக கொடுக்கப்படும் வட்டி வருமானத்தில் இருந்து கழிக்கப்பட அனுமதிக்கப்படுவதில்லை. அந்த ஃப்ளாட் கட்டி முடித்த பின் அதில் குடி புகுந்த பின்னரே அனுமதிக்கப்படுகிறது.  இது ஃப்ளாட் புக் செய்தபின் வாங்கிய கடனுக்காகக் கொடுக்கப்படும் வட்டியை வருமானத்தில் இருந்து கழிக்க அனுமதிக்க வேண்டும். வீட்டு விற்பனை மந்தமாக இருக்கும் சூழ்நிலையில் இத்தகைய வருமான வரி சம்பந்தப்பட்ட ஊக்கங்கள் உத்வேகத்தைக் கொடுக்கும்.

மூலதன ஆதாய வரி:
  
நீண்டகால மூலதன ஆதாயத்தை (Long Term Capital Gain) வருமான வரிச் சட்டப் பிரிவு  [ 54,  54 (f)- ன் படி ஒரு வீட்டில் முதலீடு செய்வதன் மூலம் ஒரு சொத்தை விற்பதன் மூலம் ஏற்படும் வரி கட்டுவது தவிர்க்கப்படுகிறது.  அதேபோல  நீண்ட கால மூலதன ஆதாயத்தை  மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் போதும் வரிச் சலுகை வழங்க வேண்டும். இதனால் பங்குச் சந்தை மற்றும் சேமிப்பும் முன்னேற்றமடையும். 
 
இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் வருமான வரி வரம்பு 5 லட்சமாக உயர்த்தப்படும் என்று அனைவரும் அதிகமாக எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் கடந்த ஆண்டு ரூ. 50,000 தான் உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு வருமான வரி வரம்பு சற்றே உயரலாம் என்று எதிர்ப்பார்க்கலாம். 
 
“மேக் இன் இந்தியா” என்பது இந்த அரசின் முக்கிய கொள்கை. இந்தத் திட்டத்தில் ஈடுபடுவோருக்கு வரிச் சலுகைகள், அதிக தேய்மானம் மற்றும் இதர சலுகைகளை வழங்கும்பட்சத்தில் இந்த புதிய மேக் இன் இந்தியா திட்டம் வெற்றி பெற வாய்ப்பாக இருக்கும். . 
 
வருமான வரி செலுத்துவோருக்கு கொடுக்கப்படும் வரிக்கான ரீஃபண்ட் உடனடியாக கொடுக்கப்படுவதில்லை என்பது பொது மக்களின் கருத்து. இதற்குக் காரணம் வரிப் பிடித்தம் (TDS) அதிகமாக இருப்பது. ஆகவே சில வகை பரிவர்த்தனைகளுக்கான டிடிஎஸ் தொகையைக் குறைக்கலாம்.'' என்றார்.

No comments:

Post a Comment