Thursday 27 July 2017

Aadhaar - PAN linkage - teething troubles still exist..

Are you grappling with last-minute issues linking Aadhaar and your PAN? Small consolation - there are many like you.. read this article in The Hindu Business Line to find out more..
With July 31 deadline imminent, fixing name mismatches is proving arduous
For many, filing income-tax returns is a fairly taxing chore. Most often, it comes with the shock of realising that your auditor wants bills and documents that you have either thrown away or misplaced.
As the July 31 deadline for filing returns nears, many taxpayers are scrambling to prove background documents and information demanded of them.
Despite proclamations by the government that the tax-filing process has been simplified, this time around there is an extra hurdle to clear.
Many individual assessees are finding it difficult to link their Permanent Account Number (PAN) with their Aadhaar number, which is a new requirement of the I-T department.
There are many reasons for this. Krithika, a private firm executive, said, “My father’s name on the PAN card does not match the name on the Aadhaar card; the latter lists his name with his initials, while the former has the initial expanded. He passed away recently and we have surrendered his phone. When I contacted the income-tax office, they had no clue as to how to deal with the issue.”
Treating this as a one-off case, the tax authorities asked her to write to the office in Chennai. “But time is running out,” she says.
That, however, is not the end of her worries. “In my mother’s case, while the Aadhaar and PAN have been linked, the system asks for her Aadhaar enrolment number. She suffers from dementia and is bed-ridden,” says Krithika. “I am unable to file both their tax returns.”
Coimbatore-based auditor and founder of GKM Tax Advisors G Karthikeyan said he too faced a similar problem and was unable to link his PAN and his Aadhaar.
“Naming conventions differ across regions,” he pointed out. “In some places, people have surnames, but in the South, we prefix names with initials. When this is expanded in one identity card and left as such on the other, there is a mismatch.”
Until recently, he said, “most of us did not bother about these issues; after all, we do have both Aadhaar and PAN cards. I got mine and my parents’ cards regularised last week. There is a huge rush to get this sorted out.”
Matters get complicated if there has been a change in mobile phone numbers, as the one-time password to effect any name change would be sent to the registered mobile.
An employee in a software company said he was fed up with the whole system as he had to wait in queue to get the details regularised.
Karthikeyan acknowledged that linking PAN and Aadhaar was a good move, but wondered why the process was being hurried through. “In India, PAN has served to establish a person’s identity for years, and there is a verified database. The government should either go with it or consider giving more time, say three months, to enable genuine filers to comply with the law,” he reasoned.
(This article was published on July 26, 2017)

Monday 6 February 2017

Electoral Bonds- Will it achieve its goals?

A “Cashless Economy” is an excellent way to wipe off or at least reduce the scourge of black money, fake money, terrorist money and kickbacks. The intention and action of the Government to do so through the biggest ever demonetization move was laudable. Yes, it had some inconveniences but little impact on GDP growth.  This will eventually lead to India becoming a “Less cash dependent economy” if not a completely “cashless economy”. Countries like Sweden boast of 93% non-cash transaction but Sweden does have several advantages such as limited population, high per capita income, advanced infrastructure etc.  The effort to lower or minimize India’s cash dependence is possible only through tightening of Income Tax norms and related rules.  The current budget proposals include reduction of cash expenditure to Rs. 10,000 from the existing Rs.20,000, introduction of a new provision that does not permit any cash payment exceeding Rs.3,00,000 and political contributions in cash mode not to exceed Rs.2,000, electoral funding etc,.
In order to establish transparency in electoral funding the FM has proposed the following in the current budget:
a) In accordance with the suggestion made by the Election Commission, the maximum amount of cash donation that a political party can receive will be Rs 2000/- from one person.
b) Political parties will be entitled to receive donations by cheque or digital mode from their donors.
c) As an additional step, an amendment is being proposed to the Reserve Bank of India Act to enable the issuance of electoral bonds in accordance with a scheme that the Government of India would frame in this regard. Under this scheme, a donor could purchase bonds from authorised banks against cheque and digital payments only. They shall be redeemable only in the designated account of a registered political party.  These bonds will be redeemable within the prescribed time limit from issuance of bond. 
d) Every political party would have to file its return within the time prescribed in accordance with the provisions of the Income-tax Act.  
The limit on accepting contribution in cash has been reduced from Rs. 20,000 to Rs. 2,000 in the current budget proposal. “Charity begins at home” – The government could have proposed a complete ban on any cash contribution to political parties and could have chosen to enforce payments through the digital mode. It may be argued that not everyone has access to digital modes – however, in this case it must be realized that people with no digital access viz the lower strata of society are not expected to contribute to political parties either – so a complete ban on cash contributions to political parties should definitely have been the norm. Considering that the efforts and intention of the Government is to move towards a digital India for most of the transactions, cash contributions especially to political parties should be completely scrapped. If the ruling dispensation are themselves shown to be slow to accept a cashless state, how did they expect the common man to embrace a cashless system in three hours – the amount of time it took the government to scrap 86% of the country’s currency? Thanks to a tough managed show, on November 8th, “at the stroke of the midnight hour, when the world slept, India’s quintessential “common man” awoke to the realities of cashless life and resultant chaos”. Given what the common man has gone through in the last couple of months post demonetization, the mere reduction in cash limits for political contributions, certainly reeks of double standards.
Coming to the other proposal to fund political parties, namely the issue of Electoral bonds – per the FM, it is an “effort to cleanse the system of political funding in India”. 
Under said proposal, “An amendment is being proposed to the Reserve Bank of India Act to enable the issuance of electoral bonds in accordance with a scheme that the Government of India would frame in this regard.  Under this scheme, a donor could purchase bonds from authorised banks against cheque and digital payments only.  They shall be redeemable only in the designated account of a registered political party.  These bonds will be redeemable within the prescribed time limit from issuance of bond.  d) Every political party would have to file its return within the time prescribed in accordance with the provision of the Income-tax Act.”  
This new provision that enables a donor to purchase bonds from authorized bank through the banking channel requires further analysis. The intention of the Government seems to be to receive the money through banking channel in exchange of a Bond which could be redeemed on a later date. Primarily the money comes into the system to the RBI and Government is free to use the said funds while redemption takes place on a later date. Secondly, though it is a bearer bond, it can be redeemed to the designated account of a political party and not to any individual thereby bringing control into the system.
However, we must look at the precedent provided by the just concluded exercise of demonetization. Reports suggest that a vast number of Jan Dhan accounts were used to convert black money into white – with or without the connivance of account holders. A similar situation cannot be ruled out in the case of electoral bonds. Who is to prevent the use of one individual account by another? While one may argue ad nauseum about Income tax source rules and the Benaami Act, it is a well-known and documented fact that those hurdles may be circumvented.
The income of a political party is exempt. Political parties will continue to be exempt from paying income-tax subject to the fulfilment of the conditions laid down regarding contribution acceptance and income tax filing.  The intent is definitely commendable. Whether it will achieve the desired result or merely pave the way for creation of another avenue for black money remains to be seen. More regulations may be required to oversee political funding and ensure a cleaner system. The onus for checking and investigating transactions, of course, falls on the Income Tax Department and mechanisms must come into force to provide the freehand for the Tax authorities to proceed per law and promote a clean system of governance and implementation. There must be an enhanced relationship and a system based on trust and cooperation to achieve compliance with rules. It goes without saying that checking every transaction and viewing all statements with suspicion is an extremely weary exercise. Systems must be such that they flag wrong doing that warrants investigation rather than implement a wholesale check which would inconvenience all concerned not to mention add to overall governance costs. One would rather not have to see investigators turn up at party offices a la James Bond quoting his famous line – “The name is Bond”  - in this case though “electoral bond”.


G. Karthikeyan
(The author is a Coimbatore-based chartered accountant and can be reached at karthikeyan.auditor@gmail.com )


Sunday 8 January 2017

பண மதிப்பு நீக்கத்தால் பலன் கிடைத்ததா?

த்திய அரசு, புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய்களை ‘பண மதிப்பு நீக்கம்’ என்று ஒரே மூச்சில் உறிஞ்சியதன் மூலம் இந்திய பணப் புழக்கத்தில் பெரும் இறுக்கம் ஏற்பட்டுள்ளது. 86 சதவிகித ரொக்கமான
ரூ.14.25 லட்சம் கோடியில் சுமார் ரூ.7 லட்சம் கோடி அளவுக்கு மட்டுமே தற்போது புழக்கத்தில் உள்ளது. பொக்ரான் அணுகுண்டு வெடிப்புபோல, மிகமிக ரகசியமாக இந்தப் பொருளாதாரக் குண்டை மத்திய அரசு போட்டவுடன்க றுப்புப் பண முதலைகள், அரசியல் லாபதாரிகள் உண்மையிலேயே ஆடிப் போனார்கள். இந்தத் திட்டம் அறிவித்து 50 நாட்கள் முடிந்த நிலையில், இந்தத் திட்டத்தின் நோக்கம் வெற்றி பெற்றதா என்று பார்ப்போம்.


பலன்கள்!

இந்தத் திட்டம் வெற்றி அடைந்ததா என்று கேட்டால், இரு வேறு கருத்துக்கள் இருக்கும். தற்காலிக சிரமங்களும், வியாபார பாதிப்புகளும் இருந்தாலும் நீண்ட காலத்தில் இது மிகவும் பயன் அளிக்கக்கூடிய திட்டம். ரொக்கமற்ற பரிவர்த்தனை, கணக்கில் காட்டி செய்யக்கூடிய வியாபாரத்தினால் வரக்கூடிய நேரடி, மறைமுக வரிகள் அதிகரிக்கும். கறுப்புப் பணம் இனி உற்பத்தி ஆவது குறையும். ஊழல் நடப்பதும் இனி குறைய வாய்ப்புள்ளது. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் வருங்காலத்தில் நடக்கும். 
அரசுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் வருமான வரியாக சுமார் ரூ.2 லட்சம் கோடி ரூபாய் காண்பிக்கப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மூன்று மாதங்களுக்கு வருமான வரித் துறையின் சர்வே, ரெய்டு போன்ற நடவடிக்கைகள் அதிகமாக இருக்கும். மேலும், வரும் நாட்களில் வரிச் சச்சரவு அதிகமாக இருக்கும்.

ரொக்கமில்லாப் பரிவர்த்தனை குறித்து, அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளால் மக்களுக்கு வங்கிப் பழக்கம் ஏற்பட்டு வருகிறது. இதன் மூலம் சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை வங்கி மூலம் பரிவர்த்தனை செய்ய முற்படுவார்கள். இந்தப் பரிவர்த்தனைகள் கணக்கில் காண்பிக்கப்பட்டு, அதற்கான மறைமுக வரிகளும் நேர்முக வரிகளும் வசூலிக்கப்படும். ரொக்கமாக சம்பளம் பெறும் நிரந்தரமற்ற ஊழியர்கள் வங்கி மூலம் சம்பளம் பெறும்பட்சத்தில், பி.எஃப், இ.எஸ்.ஐ போன்ற தொழிலாளர் நலத் திட்டங்களின் பலனைப் பெறுவார்கள். ஜிஎஸ்டி அறிமுகப் படுத்தும்போது இது மேலும் வலு சேர்க்கும்.

சோதனைகள்!

அரசின் இந்த நடவடிக்கையினால் மணிக் கணக்கில் காத்திருந்து, தங்களது பணத்தை எடுக்க சாமானிய மனிதன் சிரமப்பட்டது, 2,000 ரூபாய்க்கு சில்லறை மாற்ற முடியாமல் தடுமாறியது போன்ற பிரச்னைகள் இருந்தாலும் அவை தற்காலிகமானவை என்றுதான் சொல்ல வேண்டும்.

வங்கிப் பரிவர்த்தனைகள், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, உடனடி பணப் பரிமாற்ற சேவை (Immediate Payment Service - IMPS), மொபைல் பரிவர்த்தனை போன்றவைகளுக்கான சேவைக் கட்டணத்தைக் குறைக்க புதிய வழிமுறைகள் கட்டாயம் கண்டுபிடிக்கப்பட வேண்டும். மேலும், இணைய வழி வங்கி உபயோகம் பாதுகாப்பானதாக இருந்தால்தான் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.

வேலைவாய்ப்புக்காக நகரங்களை நோக்கி வந்த பலரும், தினப்படி செலவுக்குத் தேவையான பணம்கூட கிடைக்காததால், மீண்டும் தங்களது கிராமங்களுக்கே சென்றுவிட்டனர். இவர்களுக்கு மீண்டும் நம்பிக்கை ஏற்படுத்தி, தொழிலுக்கு கொண்டுவர சிறிது காலம் எடுக்கும். நாட்டின் மொத்த பொருள் உற்பத்தியில் (GDP) 1.5% வரை சற்று தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது. சிறு, குறுந் தொழிலில் ஈடுபட்டவர்கள் எல்லா வகையிலும் தாக்குப் பிடிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.

ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகளின் குறைபாடுகள்!

ஐம்பது நாட்களாக வங்கிகளில் மிகச் சிறப்பான பணி செய்யப்பட்டு இருந்தாலும், சில குறைபாடுகள் இருக்கவே செய்தன. ரிசர்வ் வங்கி, தனியார் வங்கிகளுக்கு அதிக அளவு ரொக்கம் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது. மேலும், தனியார் வங்கிகளின் மூலம்தான்  லஞ்சம் கொடுத்து கோடிக் கணக்கில் பழைய நோட்டுகளுக்குப் பதிலாக புதிய நோட்டுகள் மாற்றப்பட்டிருப்பதாக செய்திகள் கசிந்தன. இதற்கான காரணங்களை ரிசர்வ் வங்கி இதுவரை சொல்லவில்லை. பிரதமர் மோடி இந்தப் பிரமாதமான முடிவை தைரியமாக எடுத்திருந்தாலும், ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகள் போன்ற மற்ற அமைப்புகள்  சரியாக இதனைச் செயல்படுத்தாததால், அருமையான திட்டத்தில் ஒரு கறுப்புப் புள்ளி போல காணப்படுகிறது. இதுவரை பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்டுள்ள பணம் எவ்வளவு டெபாசிட் செய்யப் பட்டுள்ளது என்பது குறித்தும் சரியான தகவல் இல்லை என்பது இந்த அரசு மற்றும் ஆர்பிஐ மீதான நம்பகத் தன்மையைக் குறைக்கும் விதமாகவே உள்ளது.

கறுப்புப் பணம் என்பது ரொக்கம் மட்டுமல்லாமல், அசையா சொத்துகளான நிலம், கட்டடம் போன்றவையும், தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த உலோகங்கள் மற்றும் பங்குச் சந்தையில் உள்ள கறுப்புப் பணமும் அடங்கும். தற்போது அரசு குறி வைத்திருக்கும் பண மதிப்பு நீக்கத்தில் ரொக்கம் மட்டுமே அடங்கும். எனவே, அடுத்து நிலம், தங்கம், பங்குச் சந்தையில் ‘பி-நோட்ஸ்’ (P-Notes) போன்றவற்றின் மீது அடுத்தடுத்து நடவடிக்கை பாயக்கூடும் என்று நம்பலாம்.


அரசாங்கம் எதிர்பார்த்தது என்ன?


பண மதிப்பு நீக்கத்தை நடைமுறைப்படுத்தியவுடன், மக்கள் தங்களிடம் இருக்கும் 500, 1,000 ரூபாயை வங்கியில் செலுத்துவதைத் தவிர, வேறு எந்த வழியும் இருக்காது என்று நம்பிவிட்டது மத்திய அரசாங்கம். எனவே, வங்கியில் செலுத்தியபின் வருமான வரி இலாகா மூலம் கறுப்புப் பணத்துக்கான வரியை வசூல் செய்துகொள்ளலாம் என்று திட்டமிட்டனர். ஆனால், வங்கிகளில் உள்ள குறைபாடுகள் மூலம் பழைய நோட்டுகளை மாற்ற முடியும் என்பதில் கவனம் செலுத்தவில்லை. வங்கியில் இருந்து ரூ.2,000 எடுக்கவே, மணிக்கணக்கில் பொது மக்கள் காத்திருந்த நிலையில், கோடி கோடியாகக் கட்டுக்கட்டுக்காக 2,000 ரூபாய் புது நோட்டுகள் சென்றது எப்படி என்ற விவரம் குறித்து மத்திய அரசு ஆராய்ந்து, அதன் அடிப்படையில் சிலரை கைதும் செய்து வருகிறது. இது வங்கி செயல்பாடுகளில் காணப்பட்ட மிகப் பெரிய தோல்வி ஆகும்.

துன்பமில்லாமல் இன்பமில்லை!

அரசின் இந்த அதிரடித் திட்டத்தைப் பொறுத்தவரை, நாம் சற்றே பொறுமையுடன் இருக்க வேண்டிய நேரம் இது. உலக அளவில் வாங்கும் திறனில் (Purchase Parity) மூன்றாம் இடத்தில் உள்ள இந்தியா போன்ற பெரிய நாடுகளில் எந்த புது முயற்சியும் சில அசெளகரியங்களையும் சிரமங்களையும் தாண்டித்தான் வெற்றி பெற முடியும் என்பதை நாம் புரிந்துகொண்டே ஆகவேண்டும்.

கணக்கில் காட்டாத பணத்துக்கு எவ்வளவு வரி? 

வங்கிகளில் டெபாசிட் செய்தவர்களுடைய வரி எவ்வளவு என்பதைப் பார்ப்போம். தற்போது தாமாக வருமானம் அறிவிக்கும் திட்டம் 2-ன் கீழ் டெபாசிட் செய்யப்பட்ட பணத்துக்கு 49.90% வரியையும், மீதமுள்ள 25% மத்திய அரசின் பி.எம்.ஜி.கே.ஒய் (PMGKY) என்கிற திட்டத்தில் நான்கு ஆண்டுகளுக்கு வட்டி இல்லாமல் டெபாசிட் செய்வதன் மூலம் எந்தவிதமான தண்டனையும் இல்லாமல் தப்பிக்கலாம். இதுவே நடப்பு ஆண்டுக்கான வருமானமாக அதைக் காண்பித்து, அதற்கான அட்வான்ஸ் வரி கட்டும்பட்சத்தில் வருமான வரி இலாகா, 77.25% வரியை அபராதமாக வசூலிக்கும். இதற்கு அட்வான்ஸ் வரி கட்டாமல் தாமாகவே சமர்ப்பிக்கும் வருமானத்துக்கு 83.25 சதவிகிதமாக  வசூலிக்கப்படும். இதுவே வருமான வரி இலாகா அதிகாரிகள் தேடிக்  கண்டுபிடித்தால் வரி, வட்டி, அபராதம் போன்றவை சேர்ந்து 137.22 சதவிகிதமாக வசூலிக்கப்படும். இதுதவிர, சிறைத் தண்டனையும் உண்டு.

இவ்வளவு வரி கட்டுவதற்குப் பதிலாக கமிஷன் மூலம் பணத்தை மாற்றியவர்களை வருமான வரி இலாகா தேடிப் பிடித்து, அவர்களிடம் கணக்கில் வராத வகையில் ரொக்கம் ரூ.2,000 நோட்டுக்கள் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அதற்கு வருமான வரி இலாகாவின் நடவடிக்கை மட்டுமல்லாமல், சி.பி.ஐ மற்றும் அமலாக்கப் பிரிவு (ED) ஆகியவற்றின் நடவடிக்கைகளும் அவர்கள் மேல் பாயும். இவர்கள் உடனடியாக கைது செய்யப்படும் அபாயமும் உண்டு.
பயன் தராத வருமான அறிவிப்பு இரண்டாவது திட்டம்!

கடந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை தங்களது கணக்கில் காண்பிக்காத பணத்துக்கு 45% வரி செலுத்தி கணக்கை சரிசெய்ய வாய்ப்பளித்தது மத்திய அரசு. சுமார் ரூ.65,000 கோடி அளவில் கணக்கில் காண்பிக்காத பணத்துக்கு வரி செலுத்தி, பல்லாயிரக் கணக்கான மக்கள் சரிசெய்து கொண்டனர். சில நாட்களுக்குமுன் அரசு இந்தத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின்படி வரி, ஸர்சார்ஜ் மற்றும் அபராதமாக 49.9% செலுத்த வேண்டும். மேலும், கணக்கில்  காண்பிக்காத பணத்தில் 25 சதவிகிதத்தை நான்கு ஆண்டுகளுக்கு வட்டியில்லா பி.எம்.ஜி.கே.ஒய்  என்கிற பிரதம மந்திரி நலத் திட்டத்தில் டொபசிட் செய்ய வேண்டும். இந்தத் திட்டம் குறித்து நவம்பர் 8-ம் தேதி அன்றே அரசு அறிவித்திருந்தால், வரி கட்டி சரிசெய்யும் வாய்ப்பை பலரும் பெற்றிப்பார்கள். இதனால் அரசுக்கு இன்னும் கொஞ்சம் அதிக வருமானம் கிடைத்திருக்கும்.


Author CA G Karthikeyan FCA can be reached at karthikeyan.auditor@gmail.com.

This post first appeared in Nanayam Vikatan dated 08-01-2017 ( https://goo.gl/Fj629Z ) 


Thursday 13 October 2016

கருப்பு பணம் வெளியே வந்ததா?

வருமான வரிக் கணக்கை சரி செய்து செலுத்தி தூக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள் என்ற வாசகத்தை கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வரை பல வகைகளில் கேட்க முடிந்தது. வருமானம் அறிவிக்கும் திட்டம் 2016 என்று அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தில் கணக்கில் காண்பிக்காத வருமானம் மற்றும் சொத்துகளை அறி வித்து கணக்கை சரிசெய்து கொள்ளும் வாய்பை அரசு அறிவித்தது. இந்தியா முழுவதும் சேர்த்து ரூ 65,000 கோடிக்கு மேல் கணக்கில் காண்பிக்காத பணமாக வரிதாரர்கள் அறிவித்துள்ளனர். இதற்கு முன் அரசாங்கம் 1997 ஆம் ஆண்டு VDIS தாமாக முன் வந்து வருமானத்தை அறிவிக்கும் திட்டத்தில் ரூ 30,000 கோடிக்கு மேல் வெளியே கொண்டுவரப்பட்டது. ஆனால் கடந்த பல அனைத்து திட்டங்களையும் ஏப்பம் விடும் வகையில் இந்தத்திட்டம் முழு வெற்றி அடைந்துள்ளது. பிரதமரும் நிதி அமைச்சரும் இதனை வெளிப்படையாக பிரகடனப்படுத்தியுள்ளனர்.

திட்டத்தின் பின்னணி என்ன?

உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் கடந்த சில ஆண்டுகளாக வருமான வரி செலுத்தாதவர்கள் மற்றும் வெளி நாட்டில் கருப்புப்பணம் வைத்திருப் பவர்கள் பற்றி அடிக்கடி கேட்டு வந்தது. இதன் அடிப்படையில் தோற்று விக்கப்பட்டது தான் சிறப்புப் புலனாய்வு குழு (Special Investigation Team). உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, வருமான வரித்துறை முன்னாள் தலைவர் ஆகி யோரை உள்ளடக்கிய இந்தக்குழு பல வகைகளில் வரி ஏய்ப்புத்தகவல்களைத் திரட்ட வருமான வரித்துறைக்கு உத்தர விட்டனர்.

1997 க்கு பிறகு சுமார் 20 ஆண்டுக்குப் பின் வருமானம் அறிவிக்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. அசுர வேக தொழில் நுட்ப வளர்ச்சி,அதிக அளவில் வளர்ந்து வரும் சேவைத்துறை, உடனடியாகக் கிடைக்கும் தகவல்கள் போன்ற நவீன வசதிகளை வருமானவரித் துறையும் பயன்படுத்த ஆரம்பித்தது. தற்போது திட்ட உள்நோக்கு (Project Insight), சென்றடை முறை (Reach Out)) என்கிற முறை மற்றும் 360 டிகிரி நோக்கு (PROFILE) என்கிற முறைகளில் ஏராளமான தகவல்களை வருமான வரித் துறை திரட்டினர். தகவல் திரட்டல் இரண்டு வகைகளில் தீவிரப்படுத்தப்பட்டது. அகழவும் உழு மற்றும் ஆழ உழு என்ற பழமொழியைப் போல புதிய வரிதாரர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், ஏற்கெனவே உள்ள வரிதாரர்கள் அதிக வரி செலுத்தும் (WIDENING & DEEPENING) முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
வருமான வரித்துறை பல வகைகளில் சேகரிக்கத் துவங்கிய வரி ஏய்ப்புத் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. இந்தச் சூழ்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டு கணக்கு விவரங்களை HSBC வங்கி ஊழியர் பிரான்ஸ் நாட்டில் கசிய விட்டது, பனாமா பேப்பர் ஊழல் போன்ற வெளிநாட்டுச் சொத்து சம்பந்தமான விவரங்களும் வெளிச்சத்துக்கு வந்தன. இதனால் மத்திய அரசு கடந்த ஆண்டு வெளிநாட்டுச் சொத்துகளை அறிவித்து அதற்கு வரி மற்றும் அபராதமாக 60% செலுத்தி இந்தியாவிற்குள் கொண்டு வந்து விடலாம் என்று செயல்பட்டது. ஆனால் இத்திட்டம் நினைத்த அளவு வெற்றியடைவில்லை. இந்த பின்னணியில்தான் கடந்த பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் உள்நாட்டு கருப்புப் பணத்தை வெளிக் கொண்டு வரத் திட்டங்கள் அறிவிப்பதாகக் கூறினார்.

கொல்கத்தா பங்குச்சந்தையில் சில கம்பெனிகள் மூலம் வரி இல்லா லாபம் ஈட்டியவர்கள், போலி ரசீது கம்பெனிகள், மருத்துவக்கல்லூரி துவங்கியவர்கள், போன்ற 7 வகை தகவல்களைத் திரட்டி ஆதாரங்களுடன் நிதி அமைச்சகத்திடம் கொடுக்கப்பட்டது. உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்காமல் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்ற யோசனையை மத்திய அரசு பரிசீலித்தது. அதன் அடிப்படையில் பிறந்ததுதான் ஐடிஎஸ் எனும் வருமானம் அறிவிக்கும் திட்டம் 2016.

திட்டத்தின் செயல்பாடுகள்

இத்திட்டத்தில் கணக்கில் காட்டாத நிலம், வீடு, பங்குகள், பரஸ்பர நிதி, தங்கம், வைரம் போன்ற விலையுயர்ந்த உலோகங்கள்,ரொக்கப் பணம், பினாமி பேரில் உள்ள சொத்துகள் ஆகியவற்றை அறிவித்து அதற்கான வரி மற்றும் அபராதத் தொகையை செலுத்த வேண்டும். இவ்வாறு அறிவிக்கப்பட்ட வருமானத்திற்கு 30% வரி, 7.5% அபராதம் மற்றும் க்ருஷி கல்யாண் செஸ் ஆக மொத்தம் 45% கட்டி மற்ற விசாரணையில் இருந்து தப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது.
கணக்கில் காண்பிக்கப்படாத வருமானம் மற்றும் சொத்து குறித்த விவரங்களை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் குறிப்பிட்ட படிவம் 1-ல் வருமான வரி முதன்மை ஆணையரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தனது ஒப்புதலை முதன்மை ஆணையர் படிவம் 2 ன் மூலம் கொடுப்பார். அறிவிக்கப்பட்ட வருமானத்திற்கான வரியை செப்டம்பர் 2017 க்கு முன் தவணை முறையில் செலுத்த முடியும்.

எப்படி சாத்தியமானது?

கடந்த ஜுன் மாதம் முதலே வருமான வரி இலாகா திட்டம் வெற்றி அடைய அனைத்து முயற்சிகளையும் எடுக்க ஆரம்பித்தது. CARROT AND STICK என்று சொல்லப்படும் முறையைக் கையாண்டது. ஆரம்பத்தில் ஏராளமான விழிப்புணர்வு கூட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் தனி நபர் சந்திப்பு போன்ற பல வகைகளில் வரிதாரர்களுக்கு திட்டம் பற்றி எடுத்துரைத்த வருமான வரி இலாகா கடைசி மாதத்தில் பல அதிரடி சர்வே நடத்தியது. மும்பையில் முன்னணி நகைக்கடைகள் உட்பட 2000க்கும் மேற்பட்டோரிடம் சர்வே நடத்தியதில் வரிதாரர்கள்,அரசாங்கம் இத்திட்டத்தின் மேல் வைத்திருக்கும் முக்கியத்துவத்தை உணர முடிந்தது. ஆடிட்டர்களும் தங்களது முழு ஒத்துழைப்பையும் முயற்சிகளையும் கொடுத்து அவர்களது வாடிக்கையாளர்களுக்கு விளக்கியது, இந்தத் திட்ட வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம். ஆரம்பத்தில் மந்தமாகத் துவங்கிய இந்தத் திட்டம் கடைசி 3 நாட்களில் சூடு பிடித்து அரசாங்கம் எதிர்பார்த்ததை விட மிக அதிக அளவில் ரூ. 65,000 கோடிக்கு மேல் கணக்கில் காண்பிக்காத வருமானமாக அறிவிக்கப்பட்டது. தமிழ் நாட்டில் மட்டும் ரூ.3,000 கோடிக்கு மேல் வருமானமாக அறிவிக்கப்பட் டுள்ளது.

கட்டாதவர்களுக்கு இனி என்ன ஆகும்?

அளிக்கப்பட்ட வாய்ப்பைப் பயன் படுத்த தவறிய வரி ஏய்ப்பாளர்களுக்கு சற்று கடினமான காலமாகத்தான் இருக்கும். கையில் இருக்கக் கூடிய வரி ஏய்ப்புத் தகவல்களை வைத்து வருமான வரி இலாகா தீவிர நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது. தவிர பினாமி சம்பந்தமான விசாரணையை இனிமேல் வருமானவரி இலாகாதான் செய்யும் மேலும் சிறப்புப் புலனாய்வு குழு ரூ.15 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக வைத்து கொள்ளக்கூடாது, ரூ.3 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக வங்கியிலிருந்து எடுக்க முடியாது, விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் போது வரிப் பிடித்தம் போன்ற பல வகையான பரிந்துரைகளை செய்துள்ளது. இவற்றில் சில நடைமுறைக்கு வந்தாலும், வரி ஏய்ப்பாளர்களுக்கு சிரமம்தான்.

அரசியல்வாதிகள் நிலை

அரசியல்வாதிகளை வருமான வரி இலாகா ஒன்றும் செய்வதில்லை என்கிற கருத்து பொது மக்களிடையே நிலவி வருகிறது.ஆனால் சமீபகாலமாக சில அரசியல்வாதிகள், மாஜி மந்திரிகளை யும் வருமான வரி இலாகா தேடுதல் நடத்த ஆரம்பித்துள்ளது, சரியாக வரி கட்டுவோருக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. சமீபத்திய வருமானம் அறிவிப்புத் திட்டத்தின் கீழ் அரசியல் வாதிகளும் அதிகார வர்க்கத்தினரும் தங்களது கணக்கில் காட்டப்படாத வருமானத்தை அறிவிக்க முடியாது. காரணம், ஊழல் தடுப்புச்சட்டப்படி இப்படிக் காண்பிக்கப்படும் பணம் 100% அரசாங்கத்தை சேரும் மேலும் சிறை தண்டனைக்கு உட்பட்ட குற்றமாகக் கருதப்படும்.

திட்டம் வெற்றியா?

அரசாங்கம் நினைத்ததை விட அதிக அளவு வருமானம் காண்பிக்கப் பட்டது நிச்சயமாக திட்ட வெற்றி என்று கொள்ளலாம். பிரதமரும் நிதி அமைச்சரும் திருப்தியைத் தெரிவித் திருக்கும் வேளையில் வருமான வரி இலாகாவிற்கு இது ஒரு புது உந்து தலையும் உத்வேகத்தையும் கொடுத்து இருப்பது உண்மை. இனி வரும் பயணம் சரியான திசையில் இருக்கும் என்கிற நம்பிக்கையில் உள்ளனர்.

Author CA G Karthikeyan FCA can be reached at karthikeyan.auditor@gmail.com.


https://goo.gl/J5z1ng




Tuesday 31 May 2016

City biz-men say Union budget gave them little reason to rejoice

City businessmen feel there's  not much that this union budget has to offer for industries . besides the employee provident fund scheme and the excise and customs duty relaxation, industries don't get any significant benefits.

The textile industry , which is the significant contributor to the country's gross domestic product , and accounts for over 35% of the country's textile exports , feels that no big announcements impacting the industry were made in the budget. "The focus was on agriculture and the rural sector, So, the budget did not have many announcements for the textile sector," said vice-chairman of Indian Technical Textiles Association , S K Sundaraman.

Industrialist say that the 2 % relaxation of excise and 2.5% in customs will bring some relief for them. " We had hoped for some relief in the export segment. Exports from Tiruppur and Coimbatore are significant , and any policy easing export of goods or relaxing norms would benefit the textile industry," said a textile entrepreneur requesting anonymity. " the Rs. 1,840 crore allocation for the textile industry is insufficient as there are backlogs for more than nine months. It will be difficult to hope for any development with the funds allocated, " said the industrialist.

Automobile and manufacturing and pump industries too are in a fix. "several automobile parts are exported from the city. While the announcements to improve the road and rail infrastructure will speed up the transport of good from the city to the ports, decisions at the policy level would have 
brought relief to industrialists." president of Indian chamber of commerce , D Nandakumar told TOI.

Chartered accountant, G Karthikeyan ,  who moderated a panel discussion organized by the Confederation of Indian Industries on Tuesday , said that while the allocations for the industries was good, " is important to see how the government implements the schemes and how well it monitors the process." He also said that the cesses levied by the government in various forms increases the compliance cost. " Industries feel that if there is uniformity in levying cess , it will provide some relief to them," he said.

என்ன எதிர்பார்க்கலாம் இந்த பட்ஜெட்டில்?

ஓர் இடைக்கால பட்ஜெட் மற்றும் ஒரு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து முடித்துள்ளது மத்திய அரசு. பொதுவாக ஆட்சிப் பொறுப்பில் இருகும் அரசாங்கம் தமது கடைசி இரு பட்ஜெட்களை ஜனரஞ்சகமாக தாக்கல் செய்யும். ஆகவே இந்த பட்ஜெட் சற்றே முக்கியத்துவம் பெறுவதாக அமைகிறது. மேலும் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவு வளர்ச்சி இல்லாமல் உள்ள தற்போதைய சூழ்நிலையில் இந்த பட்ஜெட் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி, ஸ்டார்ட்அப் இந்தியா, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதற் கான முயற்சியும் உத்வேகமும் கொடுக்கப்பட்டு வருகிறது. இருந் தாலும், இத்திட்டங்களுக்கான பலனை பொதுமக்கள் உடனடி யாகப் பெறாத உணர்வுடன் இருக்கின்றனர். என்ன எதிர்பார்க்க லாம் இந்த பட்ஜெட்டில்?

தனி நபர் வருமானம்

பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததும் தனி நபர் வருமான வரி வரம்பு ரூபாய் ஐந்து லட்சமாக உயர்த்தப் படும் என பெரும்பான்மையான மக்களால் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. உயர்ந்து வரும் பணவீக்கத்தில் தற்போதைய வரம்பான ரூபாய் 2.5 லட்சத்தை சற்று உயர்த்தி நடுத்தர மக்களுக்கு உதவலாம் என்று பெரும்பான்மை கருத்து நிலவுகிறது.

வீட்டுக் கடன்

சொந்த வீட்டில் வசிப்பவர் வீட்டுக்கடனுக்கான வட்டியாக ரூபாய் இரண்டு லட்சம் வரை மற்ற வருமானத்தில் இருந்து கழித்துக் கொள்ள முடியும். உயர்ந்து வரும் வீடு கட்டும் தொகையை கருத்தில் கொண்டு, சொந்தமாக வசிக்கும் வீட்டுக் கடனுக்கான வட்டியை ரூபாய் இரண்டு லட்சத்தில் இருந்து உயர்த்த வேண்டும். தற்போது வீடு அல்லது ப்ளாட் கட்டி முடிக்கப்படும் முன் கொடுக்கப்படும் வட்டியை வருமானத்தில் இருந்து கழித்துக் கொள்ள முடியாது. இந்த பட்ஜெட்டில் இதற்கு மாற்றம் கொண்டு வர வேண்டும். அதாவது ப்ளாட்டை புக் செய்ததில் இருந்து வாங்கிய கடனுக்கான வட்டியை வருமானத்தில் இருந்து கழித்துக் கொள்ள வழி வகை செய்ய வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

வருமானவரிச் சட்டப் பிரிவு 54 மற்றும் 54F ன் படி நீண்டகால மூலதன லாபத்தை ஒரு புதிய வீட்டில் முதலீடு செய்யும் போது மூலதன லாபத்துக்கு வரி ஏதும் கட்டத் தேவையில்லை. இதுபோல நீண்டகால மூலதன லாபத்தை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது மூலதன வரியில் இருந்து விலக்கு அளிக்க வகை செய்யலாம். இது பங்குச்சந்தையை ஊக்குவிக்கும்.

சரக்கு மற்றும் சேவை வரி (GST)

நுகர்வோருக்கு முழுப்பலனை யும் அளிக்கக்கூடிய GST இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடை முறைக்கு வரும் என்று நிதி அமைச்சர் கடந்த பட்ஜெட் தாக்கலின் போது கூறினார். ஆனால் எதிர்கட்சிகளது ஆதரவு இல்லாததால் இது தாமதம் ஆகிறது. இந்த பட்ஜெட்டில் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்படா விட்டாலும் குளிர்கால கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்பட லாம். இந்த பட்ஜெட்டில் ஜிஎஸ்டி குறித்த ஒரு முதல் வரையறை கொடுக்கப்பட வேண்டும். இந்த மசோதா வருவதால் சேவை மற்றும் உற்பத்தி வரி விகிதத்தில் இந்த பட்ஜெட்டில் பெரிய மாற்றம் இருக்காது.

கார்ப்பரேட் வரி

நிறுவனங்களுக்கான கார்ப்ப ரேட் வரி 30% லிருந்து படிப்படியாகக் குறைத்து சில ஆண்டுகளில் 25% ஆக குறைக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் கூறியிருந்தார். ஆகவே இந்த பட்ஜெட்டில் கார்ப்பரேட் வரி குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கலாம். MAT (Minimum Alternate Tax), அதாவது குறைந்தபட்ச மாற்று வரி, சுமாராக 20% ஆக இருந்து வருகிறது. கார்ப்பரேட் வரி 25% வரை குறைக்கப்படும் என அரசு அறிவித்திருக்கும் நிலையில் இந்த குறைந்தபட்ச மாற்று வரி தற்போதைய 20% லிருந்து குறைக்கப்பட வேண்டும். இந்திய ஏற்றுமதி கடந்த ஆண்டுகளில் குறைந்து வருவதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ரூபாயின் மதிப்பு உலகச் சந்தையில் குறைந்து வரும் நிலையில் ஏற்றுமதி அதிகரித்து இருக்க வேண்டும். ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்களை தொழில் துறைக்கு அறிவிக்க வேண்டும்.

புதிய தொழில் நிறுவனங்களைத் துவங்க தனியார் நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன. வங்கி கடனுக்கான வட்டியைக் குறைக்கும் பட்சத்திலும் புதிய நிறுவனங்களைத் துவங்க சில சலுகைகளைக் கொடுக்கும் பட்சத்தில் தனியார் நிறுவனங்கள் புதிய தொழில் நிறுவனங்களைத் துவங்க ஆர்வம் காட்ட ஒரு வாய்ப்பாக அமையும்.

கருப்புப் பணம்
கடந்த பட்ஜெட்டில் வெளி நாட்டில் கருப்புப்பணம் வைத் திருப்பவர் மீது கடுமையான சட்டம் பாயும் என்று கூறிய நிதி யமைச்சர் அதற்கான சட்டத்தை யும் 2015ல் ஏற்படுத்தினார். ஆனால் 700க்கும் குறைவான மக்களே இந்தச் சட்டப்படி வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணத்துக்கான வரியையும் அபராதத்தையும் செலுத்தினர். உள்நாட்டிலுள்ள கருப்புப் பணத்தை மீட்க இந்தப் பட்ஜெட்டில் சில வருமானவரி மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

மாற்றம் வேண்டும்

வருமான வரிச் சட்டத்தில் பல விதிமுறைகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே சட்டமாக்கப்பட்டு தற்போதைய பணவீக்கத்தை கணக்கில் கொள்ளப்பட்டாமல் இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது. உதாரணமாக குழந்தைகளுக்கான படிப்புச் செலவுகளுக்கான அலவன்ஸ் மாதம் 100 ரூபாயாகவும், ஹாஸ்டலுக்கான அலவன்ஸ் மாதம் 300 ரூபாயும் ஒரு குழந்தைக்கு நிர்ணயம் செய்து அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு அனுமதிக்கப்படுகிறது. இந்த விதிமுறை பல ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்டது. இன்றைய சூழ்நிலையில் ஒரு குழந்தையின் படிப்புச் செலவுக்கு ஆண்டுக்கு சுமார் 40,000 முதல் 4 லட்சம் வரை செலவு செய்யப்படுகிறது.

மேலும் பயணச் செலவுகளுக்கான அலவன்ஸ் மாதம் 1,600 ரூபாயாக இருந்து வருகிறது. சம்பளம் பெரும் வரிதாரர்கள் மாதத்துக்கு 1,600 என்பது குறைவான தொகை இதை அதிகரிக்க வேண்டும். சம்பளம் பெறுபவர்களுக்கு முதலில் இருந்த படி Standard Deduction தொகையை அதிகப்படுத்த வேண்டும். அல்லது வரி விலக்கு வருமானத்தில் இருந்து கொடுக்க வேண்டும்.

மேலும் தற்போது விருப்ப ஒய்வு பெறும் சம்பளதாரர்கள் பெறும் மொத்த தொகையில் ரூபாய் 5 லட்சம் விலக்கு கொடுக்கப்படுகிறது. இதுபோல வீட்டு வாடகை அலவன்ஸ்(HRA) பெறாதவர்களுக்கான வீட்டு வாடகைக்கான கழிவாக Rs.20,000/- அனுமதிக்கப்படுகிறது. தற்போதைய பணவீக்க நிலையில் இவை மிகவும் குறைவான தொகை. இவற்றைச் சரி செய்யும் சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப் பட வேண்டும். இதனை இந்த பட்ஜெட்டில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்.

ஆடிட்டர். ஜி.கார்த்திகேயன் - karthikeyan.auditor@gmail.com

பட்ஜெட் எதிர்பார்த்ததும், கிடைத்ததும்

பட்ஜெட்டுக்கு முன்னால் தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வு அறிக்கை, நாட்டின் பொருளாதார நிலை குறித்த தகவல்களை தருவதுடன், பட்ஜெட்டுக்கு ஒரு முன்னோட்டத்தை அறிவிக்கும் விதமாகவும் இருக்கும். ரூபாய் 1 லட்சம் கோடி மானியத்தில், பெரும்பான்மையான தொகை வசதி படைத்த பணக்காரர்களுக்குத்தான் சென்று அடைகிறது மற்றும் 7வது ஊதிய கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த சுமார் ரூபாய் 1.2 லட்சம் கோடி அளவில் தேவைப்படுகிறது என்றும் அதில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த பட்ஜெட்டில் 9 தூண்கள் என்று விவசாயம், ஊரகத்துறை, சமூக நலத் துறை, கல்வித் துறை, கட்டமைப்பு, நிதித் துறை சீர்திருத்தம், எளிதாக வர்த்தகம் புரிதல், வரி சீர்திருத்தங்கள் என்று பிரித்து ஒவ்வொரு துறைக்கும் முக்கியத்துவம் கொடுத்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி வரம்பு உயர்த்தப்படும் என்று ஏராளமானவர்கள் எதிர்பார்த்த நிலையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வருமான வரிப் பிரிவு 87ஏ யின் கீழ் ஆண்டுக்கு ரூபாய் 5 லட்சத்துக்கும் குறைந்த வருமானம் உள்ளோருக்கு கூடுதலாக ரூ.3,000 மட்டும் வரிச்சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. வருமான வரி விகிதங்களில் மாற்றம் ஏதும் இல்லை.

நிதி அமைச்சரின் சிரமம் புரிகிறது. இந்திய மக்கள் தொகையான 125 கோடியில் சுமார் 5% மட்டுமே வரி செலுத்துவதாக உள்ள நிலையில் வரி வரம்பை உயர்த்த முன் வரவில்லை.

உத்தேச வரி

சிறு மற்றும் நடுத்தர தொழில் புரிவோருக்கு உதவும் வகையில் வருமான வரிப்பிரிவு 44ADன் படி 2 கோடி ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்பவர்கள் கணக்கு புத்தகம் ஏதும் பராமரிக்கப்பட வேண்டியதில்லை. உத்தேச வரியாக விற்பனையில் 8% லாபமாக காண்பித்து அதற்கான வரியை செலுத்தினால் போதுமானது. அதேபோல புரபஷனல்ஸ் என்று சொல்லக்கூடிய மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள் போன்றோர் தங்களது மொத்த வருமானம் ரூ.50 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால் உத்தேச வருமானமாக 50%-ஐ காண்பித்து அதற்கான வரியை செலுத்தினால் போதுமானது. கணக்கு புத்தகம் ஏதும் பராமரிக்கப்பட வேண்டியதில்லை. இந்த வரம்பிற்கு கீழ் லாபம் காட்டினால் கட்டாய தணிக்கை செய்ய வேண்டும்.

நிறுவன வரி (Corporate Tax)

வரும் ஆண்டுகளில் மானியங்கள் குறைக்கப்பட்டு வரி விகிதமும் குறைக்கப்படும் என்று ஏற்கனவே அரசு அறிவித்து இருந்தது. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி செலவுக்கணக்கில் முழு சராசரி (weighted average) யாக, நிதியாண்டு 2016-17 க்கு 150% ஆகவும் 2017-18 க்கு 100% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. துரிதத் தேய்மானம் காற்றாலை (windmill) போன்ற சில இயந்திரங்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த துரிதத் தேய்மானம் (Accelerated Depreciation) 2017 ஏப்ரல் 01 லிருந்து அதிகபட்சமாக 40% ஆக மட்டுமே அனுமதிக்கப்படும். 2020 மார்ச் 31 வரை நிறுவப்படும் சிறப்பு ஏற்றுமதி மண்டல (SEZ) தொழில் நிறுவனங்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.

புதிதாக அதாவது 01.03.16 க்கு பிறகு உற்பத்தி செய்ய நிறுவப்படும் நிறுவனங்களுக்கு வருமான வரி 25% குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிறுவனங்கள் துரிதத் தேய்மானம் மற்றும் முதலீட்டு சலுகைகள் எடுத்துக் கொள்ள முடியாது. இந்த ஆண்டிலிருந்து ரூபாய் 5 கோடிக்கு மிகாமல் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு வருமான வரிவிகிதம் 29% குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனங்களுக்கு வரி மற்றும் கூடுதல் வரியும் பொருந்தும்.

ஸ்டார்ட்அப் (Start-up) நிறுவனங்கள்
புதிய தொழிலதிபர்களை உருவாக்குவதில் முனைப்பு கொண்டிருக்கும் இந்த அரசு 2016 ஏப்ரல் 01 முதல் 2019 மார்ச் 31 வரை நிறுவப்படும் நிறுவனங்களுக்கு, அதாவது 5 ஆண்டுகளில் முதல் 3 ஆண்டுகள் 100% லாபத்திலிருந்து விலக்கு கொடுக்க வகை செய்துள்ளது. ஆனால் இந்த நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச மாற்று வரி பொருந்தும் (minimum alternative tax).

பட்டியலிடப்படாத (Unlisted) நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யும்போது ஏற்படும் லாபத்திற்கான நீண்டகால மூலதன ஆதாயம் 3 ஆண்டிலிருந்து 2 ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது. வியாபாரத்தை எளிதில் துவங்கும் வகையில் நிறுவனங்கள் ஒரே நாளில் பதிவு செய்ய கம்பெனி சட்டத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

கருப்புப்பணம்

தாமாக முன்வந்து கணக்கில் காண்பிக்காத பணத்தை 45% வரி மற்றும் உபரித் தொகையாக செலுத்தும் பட்சத்தில் எந்தவித கேள்வியும் அபராதமும் சிறை தண்டணையும் இல்லாமல் ஏற்று கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார். இத்திட்டம் 01.06.15 முதல் 30.09.16 வரை நடைமுறையில் இருக்கும். இந்த திட்டத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றாலும் இதனை அதிகம் பேர் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புண்டு.

டிவிடெண்ட் விநியோக வரி
பட்டியலிடப்படாத (Unlisted) நிறுவனங்களின் பங்குதாரர்களுக்கு கொடுக்கப்படும் டிவிடெண்ட் தொகைக்கு டிவிடெண்ட் விநியோக வரி (Dividend Distribution Tax) நிறுவனம் கட்ட வேண்டும். அதில் ஒரு மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்படி அளிக்கப்படும் டிவிடண்ட் தொகை ரூ.10 லட்சத்திற்கு அதிகமாகும் பட்சத்தில் இதை பெறும் பங்குதாரர்கள் 10% வரி கட்ட வேண்டும். இந்த மாற்றத்தால் பங்கு சந்தையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

வரி சீர்திருத்தங்கள்

வருமான வரி கட்டுபவர்களுக்கான நடைமுறைகளை சுலபமாக்கும் வகையில் இமெயில் மூலமாக கேள்விகள் கேட்கப்பட்டு வருமான வரிக் கணக்கை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்தியாவில் 7 பெரு நகரங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்த உள்ளது.

வருமான வரி அதிகாரங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது, அபராத தொகையாக காண்பிக்கப்படாத வருமானத்திற்கான வரியாக 100% லிருந்து 300 % வரை விதிக்க வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது.

தற்போது இது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தங்களது வருமானத்தை குறைவாக காண்பிக்கும்பட்சத்தில் அபராத தொகை 50% ஆகவும், வருமானத்தை உண்மைக்கு மாறாக தவறாக காண்பிக்கப்படும் பட்சத்தில் அபராதமாக 200% ஆகவும் மாற்றப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பில் ஈடுபடுவோருக்கு இது பலத்த அடியாக இருக்கும்.

வருமான வரி மேல் முறையீட்டுக்கு செல்பவர்களுக்கு சில சாதகமான நடைமுறை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வரித் தொகையில் 15% கட்டினால் மேல் முறையீடு முடியும் வரை நிறுத்திவைக்க (Stay) கொடுக்க வரி அதிகாரிகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக உலக அளவில் பேசப்பட்டது வோடாபோன் நிறுவன வருமான வரி வழக்கு. இந்த வழக்கிற்கு பிறகு வருமான வரிச்சட்டத்தில் வரிப்பிரிவு 9-ல் கொண்டு வரப்பட்ட மாற்றம் பழைய ஆண்டுகளுக்கும் பொருந்தும் என்று கூறியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த பட்ஜெட்டில் பழைய ஆண்டுகளுக்கான சட்டத்தில் கணக்கை மறுபரிசீலனை செய்தால் வருவாய் செயலர் தலைமையில் உள்ள உயர்நிலை கமிட்டியின் ஒப்புதலுக்குப் பின் தான் செய்ய முடியும் என்ற மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த பட்ஜெட் வெகு ஜனங்களுக்கும், கீழேயுள்ள நடுத்தர மக்களுக்கும் ஏற்ற வகையில் தாக்கல் செய்யபட்டுள்ளது. 9 தூண்களுக்கான திட்டங்கள் சரியான முறையில் செயல்படுத்தப்பட்டால் நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும் என்பதில் சந்தேகம் இல்லை.
karthikeyan.auditor@gmail.com