Monday 29 February 2016

பட்ஜெட் - 2016 நிதித் துறையில் எதிர்பார்க்கப்படும் தனிநபர் வரிச் சலுகைகள்!

‘‘சொந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தாலும் வரிச் சலுகை வேண்டும்!’’

ஆடிட்டர். ஜி. கார்த்திகேயன், கோவை.

‘‘வீட்டுக் கடனுக்கான வட்டி தற்போது வீட்டுக் கடன்  மூலம் வாங்கிய  வீட்டில் வசித்தால் ரூ.2 லட்சம் வரையிலும், அந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால் வரம்பு ஏதும் இல்லாமல் வட்டியை மொத்த வருமானத்தில் இருந்து கழித்து வரிச் சலுகை பெறலாம்.
இனி, வீட்டுக் கடன் மூலம் வாங்கிய வீட்டில் குடியிருந்தாலும் வரம்பு ஏதும் இல்லாமல் வட்டியை வருமானத்தில் இருந்து கழிக்க அனுமதிக்க வேண்டும். 

வீட்டைக் கடன் வாங்கி கட்டினால் அல்லது வாங்கினால் கட்டுமானக் காலத்தில் வட்டியை தற்போது வருமானத்தில் இருந்து கழிக்க அனுமதிக்கப்படுவதில்லை. 

உதாரணமாக, ஒரு ஃப்ளாட் ஒன்றுக்கு முன்பணம் கொடுத்து பதிவு செய்து அந்த ஃப்ளாட் கட்டப்படும் நிலையில் அதற்காக கொடுக்கப்படும் வட்டி வருமானத்தில் இருந்து கழிக்கப்பட அனுமதிக்கப்படு வதில்லை. அந்த ஃப்ளாட் கட்டி முடித்தபின் அதில் குடிபுகுந்த பின்னரே அனுமதிக்கப் படுகிறது. 

இது ஃப்ளாட் புக் செய்தபின் வாங்கிய கடனுக்காகக் கொடுக்கப்படும் வட்டியை வருமானத்தில் இருந்து கழிக்க அனுமதிக்க வேண்டும். வீட்டு விற்பனை மந்தமாக இருக்கும் சூழ்நிலையில் இத்தகைய வருமான வரி சம்பந்தப்பட்ட ஊக்கங்கள் உத்வேகத்தைக் 
கொடுக்கும்.  

நீண்ட கால மூலதன ஆதாயத்தை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போதும் வரிச் சலுகை வழங்க வேண்டும். இதனால் பங்குச் சந்தை மற்றும் சேமிப்பும் முன்னேற்றமடையும். 

வருமான வரி செலுத்துவோருக்கு கொடுக்கப்படும் வரிக்கான ரீஃபண்ட் உடனடியாக கொடுக்கப்படுவதில்லை என்பது பொது மக்களின் கருத்து. இதற்குக் காரணம், வரிப் பிடித்தம் (TDS) அதிகமாக இருப்பது. ஆகவே, சில வகை பரிவர்த்தனைகளுக்கான 
டிடிஎஸ் தொகையைக் குறைக்கலாம்.’’

Tuesday 16 February 2016

Budget 2016-17 - What should the Central Government do?

2016-17 ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்?

ஆடிட்டர். ஜி. கார்த்திகேயன், கோவை
 
'' வீட்டுக் கடனுக்கான வட்டி தற்போது, வீட்டில் வசித்தால் இருந்தால் ரூ. 2 லட்சம் வரையிலும்,  வாடகைக்கு விட்டிருந்தால்  வரம்பு ஏதும் இல்லாமல் வட்டியை மொத்த வருமானத்தில் இருந்து கழித்து வரிச் சலுகை பெறலாம். வீட்டில் குடியிருந்தாலும் வரம்பு ஏதும் இல்லாமல் வட்டியை வருமானத்தில் இருந்து கழிக்க அனுமதிக்க வேண்டும்.  வீட்டை கடன் வாங்கி கட்டினால், அல்லது வாங்கினால் கட்டுமானக் காலத்தில் வட்டியை தற்போது வருமானத்தில் இருந்து கழிக்க அனுமதிக்கப்படுவதில்லை.
 
உதாரணமாக ஒரு ஃப்ளாட் ஒன்றுக்கு முன்பணம் கொடுத்து பதிவு செய்து அந்த ஃப்ளாட் கட்டப்படும் நிலையில் அதற்காக கொடுக்கப்படும் வட்டி வருமானத்தில் இருந்து கழிக்கப்பட அனுமதிக்கப்படுவதில்லை. அந்த ஃப்ளாட் கட்டி முடித்த பின் அதில் குடி புகுந்த பின்னரே அனுமதிக்கப்படுகிறது.  இது ஃப்ளாட் புக் செய்தபின் வாங்கிய கடனுக்காகக் கொடுக்கப்படும் வட்டியை வருமானத்தில் இருந்து கழிக்க அனுமதிக்க வேண்டும். வீட்டு விற்பனை மந்தமாக இருக்கும் சூழ்நிலையில் இத்தகைய வருமான வரி சம்பந்தப்பட்ட ஊக்கங்கள் உத்வேகத்தைக் கொடுக்கும்.

மூலதன ஆதாய வரி:
  
நீண்டகால மூலதன ஆதாயத்தை (Long Term Capital Gain) வருமான வரிச் சட்டப் பிரிவு  [ 54,  54 (f)- ன் படி ஒரு வீட்டில் முதலீடு செய்வதன் மூலம் ஒரு சொத்தை விற்பதன் மூலம் ஏற்படும் வரி கட்டுவது தவிர்க்கப்படுகிறது.  அதேபோல  நீண்ட கால மூலதன ஆதாயத்தை  மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் போதும் வரிச் சலுகை வழங்க வேண்டும். இதனால் பங்குச் சந்தை மற்றும் சேமிப்பும் முன்னேற்றமடையும். 
 
இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் வருமான வரி வரம்பு 5 லட்சமாக உயர்த்தப்படும் என்று அனைவரும் அதிகமாக எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் கடந்த ஆண்டு ரூ. 50,000 தான் உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு வருமான வரி வரம்பு சற்றே உயரலாம் என்று எதிர்ப்பார்க்கலாம். 
 
“மேக் இன் இந்தியா” என்பது இந்த அரசின் முக்கிய கொள்கை. இந்தத் திட்டத்தில் ஈடுபடுவோருக்கு வரிச் சலுகைகள், அதிக தேய்மானம் மற்றும் இதர சலுகைகளை வழங்கும்பட்சத்தில் இந்த புதிய மேக் இன் இந்தியா திட்டம் வெற்றி பெற வாய்ப்பாக இருக்கும். . 
 
வருமான வரி செலுத்துவோருக்கு கொடுக்கப்படும் வரிக்கான ரீஃபண்ட் உடனடியாக கொடுக்கப்படுவதில்லை என்பது பொது மக்களின் கருத்து. இதற்குக் காரணம் வரிப் பிடித்தம் (TDS) அதிகமாக இருப்பது. ஆகவே சில வகை பரிவர்த்தனைகளுக்கான டிடிஎஸ் தொகையைக் குறைக்கலாம்.'' என்றார்.

Swachh Bharath, CSR and Start Up

The Swachh Bharat Abhiyan or the “Clean India” campaign is also an opportunity for start-ups and Corporates.

The idea behind the movement is to gradually stop open defecation and control the diseases caused by it. It offers myriad opportunities for start-up business and for fulfilment of social responsibility objectives of corporates.

A majority of the Indian population has mobile phones but they do not have access to toilets – and that is a telling fact. Hygiene takes a back seat in rural as well as urban India, especially among the low income groups.

Here is how this campaign is an opportunity – the cost of constructing a toilet is estimated to be Rs. 20,000. Of this, the central government will subsidise Rs.4,000 and the State and local bodies will provide subsidy of Rs. 2,000 each.

That means the actual cost incurred by the individual is Rs. 12,000.
Construction start-ups who do not have heavy capital to invest can use this opportunity to start construction projects on smaller scale.

Funding can be obtained easily as overall costs are much less compared to standard construction projects and these provide a solid base for small start-ups to expand prudently without singeing their hands in large investment/capital heavy projects. This provides great opportunity to those who aspire to be entrepreneurs.

Corporates in India are duty bound to spend two per cent of their profits in social responsibility projects. This should be implemented under the Companies Act 2013. Section 135 of the Companies Act provides the threshold limit for applicability of the CSR to a Company i.e. (a) net worth of the company to be Rs 500 crore or more; (b) turnover of the company to be Rs. 1,000 crore or more; (c) net profit of the company to be Rs 5 crore or more.

Further as per the CSR Rules, the provisions of CSR are not only applicable to Indian companies, but also applicable to branch and project offices of a foreign company in India. Every qualifying company requires spending of at least two per cent of its average net profit for the immediately preceding three financial years on CSR activities.

From construction to fulfilling corporate social responsibility objectives, the Swachh Bharat Abhiyan is an opportunity.

While constructing toilets across India has gathered momentum, with nearly 95 lakh toilets being built in a year, usage levels are still low.

The north east seems to have done the best with usage being 100 per cent, but elsewhere toilet usage remains at   46 per cent to 50 per cent. Perhaps, it would be a good idea for corporates to also undertake hygiene education as part of CSR activities so that the effort of building toilets is not wasted.
India has long wilted under the scourge of public defecation.

It is a matter of shame on the world stage that a country of technology experts still has open defecation. The public and the private sector are now geared to meet this challenge and make India healthier and cleaner in every sense.

G. Karthikeyan
(The author is a Coimbatore-based chartered accountant)

Abroad Study Expenses - How much does RBI allow?

வெளிநாட்டுப் படிப்புச் செலவுக்கு எவ்வளவு அனுப்ப ரிசர்வ் வங்கி அனுமதிக்கிறது?

ஆடிட்டர் ஜீ.கார்த்திகேயன்  பன்னாட்டு வரி ஆலோசகர், கோவை
தீப்தி மாதவன் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். தனது இன்ஜினீயரிங் பட்டப்படிப்பை பெங்களூரில் உள்ள முன்னணி கல்லூரியில் சமீபத்தில் படித்து முடித்தார். அவரது தந்தையின் தொழிற்சாலையில் சேர்வதா அல்லது வேறு ஏதாவது பன்னாட்டு கம்பெனியில் சில காலம் வேலை செய்ய வைக்கலாமா என்று வீட்டில் அனைவரும் யோசித்துக் கொண்டிருந்தார்கள். தீப்தி கர்நாடக சங்கீதத்தில் அதிக ஆர்வமுடையவர். சிறுவயது முதலே ஏராளமான கச்சேரிகளையும் செய்து வந்தவர். ஆறு வயது இருக்கும் போதே, அவரது மாமாவின் கர்நாடக இசை ஞானத்தால் கவரப்பட்டு தொடர்ந்து பயிற்சி பெற்று வந்தவர். தனது படிப்புடன் தொடர்ந்து சங்கீதத்திலும் ஈடுபாடு கொண்டிருந்த தீப்தி தனது இன்ஜினீயரிங் படிப்பை முடித்தவுடன் தடாலடியாக தனது பெற்றோர்களிடம் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள இசைக் கல்லூரியில் சேர்வதாகக் கூறினார். பட்டப் படிப்பிற்கும் மேல் படிப்பிற்கும் சம்பந்தம் இல்லாததால் பெற்றோர்கள் ஷீலாவும் மாதவனும் நீண்ட யோசனைக்குப் பின் ஒத்துக் கொண்டார்கள்.

ஹாலிவுட் நகரில் அமைந்த இசைக் கல்லூரியானதால் அங்கு இடம் கிடைப்பது கஷ்டமான விஷயம். ஆனால் தீப்தியின் இசை ஆர்வத்தாலும் அவரது மாமாவின் சங்கீதத்தில் அதிகப் பிரசித்தி பெற்று பலரையும் தெரிந்திருந்ததால் அமெரிக்க இசைக்கல்லூரியில் அட்மிஷன் சிரமமில்லாமல் கிடைத்து விட்டது. இப்போது அமெரிக்கா செல்ல தீப்தி தயார்.

கல்லூரிக் கட்டணம், தங்கும் வீடு, மற்ற செலவுகள் அந்நியச்செலாவணியில் செய்ய வேண்டும். ரிசர்வ் வங்கி எவ்வளவு அனுமதிக்கிறது என்று ஆராயத் தொடங்கினார் மாதவன்.

உத்தேசமாக ஆண்டுக்கு 60,000 டாலர் வரை செலவாகும் என்று கணக்கிட்டார். இந்தத் தொகையை வங்கி மூலம் மாதந்தோறும் அனுப்பலாம் என்று முடிவு செய்தார். இதற்கு முன் அனுமதி ஏதேனும் தேவையா?
ஆண்டிற்கு 1,00,000 டாலர் வரை படிப்பு செலவு மற்றும் பராமரிப்பு செலவுக்காக வெளிநாட்டிற்கு அனுப்ப  ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கிறது. இத்தொகையை விட கூடுதலாகத் தேவைப்பட்டால் வெளிநாட்டுப் பல்கலைகழகத்தின் உத்தேச மதிப்புப்படி (Estimate)  அந்நியச்செலாவணியை வெளிநாடு அனுப்ப ரிசர்வ் வங்கி அனுமதிக்கிறது. மேல் படிப்பிற்காக பணம்  அனுப்ப எளிமையான படிவம் (FORM) A-2 ஐ தாக்கல் செய்ய வேண்டும்.  இது தவிர வேறு எந்தப் படிவமும் வேண்டியதில்லை.  வெளிநாடு செல்லும் மாணவரது வங்கிக் கணக்கில் இருந்து இந்தத் தொகையை அனுப்ப முடியும். வங்கிக்கடன் முலமாக பெறப்பட்டத் தொகையையும் அனுப்பலாம்.
உறவினர்கள் இந்தத் தொகையை அனுப்ப முடியுமா?

நெருங்கிய உறவினர்களும் படிப்பு மற்றும் பராமரிப்புச் செலவை அனுப்ப முடியும். நெருங்கிய உறவினர்கள் எனப்படுபவர்கள் கீழ்க்கண்டவர்கள் அடங்குவர்.
 ·    ஒரே இந்துக் கூட்டுக் குடும்பத்தின் உறுப்பினர்
 ·    கணவன் மற்றும் மனைவி
 ·    பெற்றோர்
 ·    பிள்ளைகள்
 ·    மருமகன் மற்றும் மருமகள்
 ·    சகோதர சகோதரியர் மற்றும் அவர்களுடைய துணைவியர்
 ·    தாத்தா மற்றும் பாட்டி
 ·    பேரன் மற்றும் பேத்தி

மேலும் மாணவரது பெயரில் உள்ள Resident Foreign Currency Account அல்லது Exporter Earnings Foreign Currency Accounts ல் இருந்தால் எந்தவித  அதிக வரம்பும் இல்லாமல் வெளிநாட்டுக்கு அனுப்ப முடியும்.
தாராளமாக மேல்நாட்டுப் படிப்புக்காக ரிசர்வ் வங்கியின் விதிகளால் அமெரிக்காவுக்கு தீப்தியை அனுப்ப அவரது பெற்றோர்கள் மற்ற வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தார்கள். இசைத்துறையில் வித்தியாசமான ஒரு புதிய அனுபவத்தை பெறத் துடித்துக் கொண்டிருந்த தீப்தி கூடிய விரைவில் அடிக்கடி டிஸ்னிலேண்ட் மற்றும் யுனிவர்சல் ஸ்டூடியோவைப் பார்க்கலாம் என்ற கனவில் திளைக்க ஆரம்பித்தார்.