Thursday 13 October 2016

கருப்பு பணம் வெளியே வந்ததா?

வருமான வரிக் கணக்கை சரி செய்து செலுத்தி தூக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள் என்ற வாசகத்தை கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வரை பல வகைகளில் கேட்க முடிந்தது. வருமானம் அறிவிக்கும் திட்டம் 2016 என்று அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தில் கணக்கில் காண்பிக்காத வருமானம் மற்றும் சொத்துகளை அறி வித்து கணக்கை சரிசெய்து கொள்ளும் வாய்பை அரசு அறிவித்தது. இந்தியா முழுவதும் சேர்த்து ரூ 65,000 கோடிக்கு மேல் கணக்கில் காண்பிக்காத பணமாக வரிதாரர்கள் அறிவித்துள்ளனர். இதற்கு முன் அரசாங்கம் 1997 ஆம் ஆண்டு VDIS தாமாக முன் வந்து வருமானத்தை அறிவிக்கும் திட்டத்தில் ரூ 30,000 கோடிக்கு மேல் வெளியே கொண்டுவரப்பட்டது. ஆனால் கடந்த பல அனைத்து திட்டங்களையும் ஏப்பம் விடும் வகையில் இந்தத்திட்டம் முழு வெற்றி அடைந்துள்ளது. பிரதமரும் நிதி அமைச்சரும் இதனை வெளிப்படையாக பிரகடனப்படுத்தியுள்ளனர்.

திட்டத்தின் பின்னணி என்ன?

உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் கடந்த சில ஆண்டுகளாக வருமான வரி செலுத்தாதவர்கள் மற்றும் வெளி நாட்டில் கருப்புப்பணம் வைத்திருப் பவர்கள் பற்றி அடிக்கடி கேட்டு வந்தது. இதன் அடிப்படையில் தோற்று விக்கப்பட்டது தான் சிறப்புப் புலனாய்வு குழு (Special Investigation Team). உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, வருமான வரித்துறை முன்னாள் தலைவர் ஆகி யோரை உள்ளடக்கிய இந்தக்குழு பல வகைகளில் வரி ஏய்ப்புத்தகவல்களைத் திரட்ட வருமான வரித்துறைக்கு உத்தர விட்டனர்.

1997 க்கு பிறகு சுமார் 20 ஆண்டுக்குப் பின் வருமானம் அறிவிக்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. அசுர வேக தொழில் நுட்ப வளர்ச்சி,அதிக அளவில் வளர்ந்து வரும் சேவைத்துறை, உடனடியாகக் கிடைக்கும் தகவல்கள் போன்ற நவீன வசதிகளை வருமானவரித் துறையும் பயன்படுத்த ஆரம்பித்தது. தற்போது திட்ட உள்நோக்கு (Project Insight), சென்றடை முறை (Reach Out)) என்கிற முறை மற்றும் 360 டிகிரி நோக்கு (PROFILE) என்கிற முறைகளில் ஏராளமான தகவல்களை வருமான வரித் துறை திரட்டினர். தகவல் திரட்டல் இரண்டு வகைகளில் தீவிரப்படுத்தப்பட்டது. அகழவும் உழு மற்றும் ஆழ உழு என்ற பழமொழியைப் போல புதிய வரிதாரர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், ஏற்கெனவே உள்ள வரிதாரர்கள் அதிக வரி செலுத்தும் (WIDENING & DEEPENING) முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
வருமான வரித்துறை பல வகைகளில் சேகரிக்கத் துவங்கிய வரி ஏய்ப்புத் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. இந்தச் சூழ்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டு கணக்கு விவரங்களை HSBC வங்கி ஊழியர் பிரான்ஸ் நாட்டில் கசிய விட்டது, பனாமா பேப்பர் ஊழல் போன்ற வெளிநாட்டுச் சொத்து சம்பந்தமான விவரங்களும் வெளிச்சத்துக்கு வந்தன. இதனால் மத்திய அரசு கடந்த ஆண்டு வெளிநாட்டுச் சொத்துகளை அறிவித்து அதற்கு வரி மற்றும் அபராதமாக 60% செலுத்தி இந்தியாவிற்குள் கொண்டு வந்து விடலாம் என்று செயல்பட்டது. ஆனால் இத்திட்டம் நினைத்த அளவு வெற்றியடைவில்லை. இந்த பின்னணியில்தான் கடந்த பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் உள்நாட்டு கருப்புப் பணத்தை வெளிக் கொண்டு வரத் திட்டங்கள் அறிவிப்பதாகக் கூறினார்.

கொல்கத்தா பங்குச்சந்தையில் சில கம்பெனிகள் மூலம் வரி இல்லா லாபம் ஈட்டியவர்கள், போலி ரசீது கம்பெனிகள், மருத்துவக்கல்லூரி துவங்கியவர்கள், போன்ற 7 வகை தகவல்களைத் திரட்டி ஆதாரங்களுடன் நிதி அமைச்சகத்திடம் கொடுக்கப்பட்டது. உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்காமல் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்ற யோசனையை மத்திய அரசு பரிசீலித்தது. அதன் அடிப்படையில் பிறந்ததுதான் ஐடிஎஸ் எனும் வருமானம் அறிவிக்கும் திட்டம் 2016.

திட்டத்தின் செயல்பாடுகள்

இத்திட்டத்தில் கணக்கில் காட்டாத நிலம், வீடு, பங்குகள், பரஸ்பர நிதி, தங்கம், வைரம் போன்ற விலையுயர்ந்த உலோகங்கள்,ரொக்கப் பணம், பினாமி பேரில் உள்ள சொத்துகள் ஆகியவற்றை அறிவித்து அதற்கான வரி மற்றும் அபராதத் தொகையை செலுத்த வேண்டும். இவ்வாறு அறிவிக்கப்பட்ட வருமானத்திற்கு 30% வரி, 7.5% அபராதம் மற்றும் க்ருஷி கல்யாண் செஸ் ஆக மொத்தம் 45% கட்டி மற்ற விசாரணையில் இருந்து தப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது.
கணக்கில் காண்பிக்கப்படாத வருமானம் மற்றும் சொத்து குறித்த விவரங்களை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் குறிப்பிட்ட படிவம் 1-ல் வருமான வரி முதன்மை ஆணையரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தனது ஒப்புதலை முதன்மை ஆணையர் படிவம் 2 ன் மூலம் கொடுப்பார். அறிவிக்கப்பட்ட வருமானத்திற்கான வரியை செப்டம்பர் 2017 க்கு முன் தவணை முறையில் செலுத்த முடியும்.

எப்படி சாத்தியமானது?

கடந்த ஜுன் மாதம் முதலே வருமான வரி இலாகா திட்டம் வெற்றி அடைய அனைத்து முயற்சிகளையும் எடுக்க ஆரம்பித்தது. CARROT AND STICK என்று சொல்லப்படும் முறையைக் கையாண்டது. ஆரம்பத்தில் ஏராளமான விழிப்புணர்வு கூட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் தனி நபர் சந்திப்பு போன்ற பல வகைகளில் வரிதாரர்களுக்கு திட்டம் பற்றி எடுத்துரைத்த வருமான வரி இலாகா கடைசி மாதத்தில் பல அதிரடி சர்வே நடத்தியது. மும்பையில் முன்னணி நகைக்கடைகள் உட்பட 2000க்கும் மேற்பட்டோரிடம் சர்வே நடத்தியதில் வரிதாரர்கள்,அரசாங்கம் இத்திட்டத்தின் மேல் வைத்திருக்கும் முக்கியத்துவத்தை உணர முடிந்தது. ஆடிட்டர்களும் தங்களது முழு ஒத்துழைப்பையும் முயற்சிகளையும் கொடுத்து அவர்களது வாடிக்கையாளர்களுக்கு விளக்கியது, இந்தத் திட்ட வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம். ஆரம்பத்தில் மந்தமாகத் துவங்கிய இந்தத் திட்டம் கடைசி 3 நாட்களில் சூடு பிடித்து அரசாங்கம் எதிர்பார்த்ததை விட மிக அதிக அளவில் ரூ. 65,000 கோடிக்கு மேல் கணக்கில் காண்பிக்காத வருமானமாக அறிவிக்கப்பட்டது. தமிழ் நாட்டில் மட்டும் ரூ.3,000 கோடிக்கு மேல் வருமானமாக அறிவிக்கப்பட் டுள்ளது.

கட்டாதவர்களுக்கு இனி என்ன ஆகும்?

அளிக்கப்பட்ட வாய்ப்பைப் பயன் படுத்த தவறிய வரி ஏய்ப்பாளர்களுக்கு சற்று கடினமான காலமாகத்தான் இருக்கும். கையில் இருக்கக் கூடிய வரி ஏய்ப்புத் தகவல்களை வைத்து வருமான வரி இலாகா தீவிர நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது. தவிர பினாமி சம்பந்தமான விசாரணையை இனிமேல் வருமானவரி இலாகாதான் செய்யும் மேலும் சிறப்புப் புலனாய்வு குழு ரூ.15 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக வைத்து கொள்ளக்கூடாது, ரூ.3 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக வங்கியிலிருந்து எடுக்க முடியாது, விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் போது வரிப் பிடித்தம் போன்ற பல வகையான பரிந்துரைகளை செய்துள்ளது. இவற்றில் சில நடைமுறைக்கு வந்தாலும், வரி ஏய்ப்பாளர்களுக்கு சிரமம்தான்.

அரசியல்வாதிகள் நிலை

அரசியல்வாதிகளை வருமான வரி இலாகா ஒன்றும் செய்வதில்லை என்கிற கருத்து பொது மக்களிடையே நிலவி வருகிறது.ஆனால் சமீபகாலமாக சில அரசியல்வாதிகள், மாஜி மந்திரிகளை யும் வருமான வரி இலாகா தேடுதல் நடத்த ஆரம்பித்துள்ளது, சரியாக வரி கட்டுவோருக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. சமீபத்திய வருமானம் அறிவிப்புத் திட்டத்தின் கீழ் அரசியல் வாதிகளும் அதிகார வர்க்கத்தினரும் தங்களது கணக்கில் காட்டப்படாத வருமானத்தை அறிவிக்க முடியாது. காரணம், ஊழல் தடுப்புச்சட்டப்படி இப்படிக் காண்பிக்கப்படும் பணம் 100% அரசாங்கத்தை சேரும் மேலும் சிறை தண்டனைக்கு உட்பட்ட குற்றமாகக் கருதப்படும்.

திட்டம் வெற்றியா?

அரசாங்கம் நினைத்ததை விட அதிக அளவு வருமானம் காண்பிக்கப் பட்டது நிச்சயமாக திட்ட வெற்றி என்று கொள்ளலாம். பிரதமரும் நிதி அமைச்சரும் திருப்தியைத் தெரிவித் திருக்கும் வேளையில் வருமான வரி இலாகாவிற்கு இது ஒரு புது உந்து தலையும் உத்வேகத்தையும் கொடுத்து இருப்பது உண்மை. இனி வரும் பயணம் சரியான திசையில் இருக்கும் என்கிற நம்பிக்கையில் உள்ளனர்.

Author CA G Karthikeyan FCA can be reached at karthikeyan.auditor@gmail.com.


https://goo.gl/J5z1ng




Tuesday 31 May 2016

City biz-men say Union budget gave them little reason to rejoice

City businessmen feel there's  not much that this union budget has to offer for industries . besides the employee provident fund scheme and the excise and customs duty relaxation, industries don't get any significant benefits.

The textile industry , which is the significant contributor to the country's gross domestic product , and accounts for over 35% of the country's textile exports , feels that no big announcements impacting the industry were made in the budget. "The focus was on agriculture and the rural sector, So, the budget did not have many announcements for the textile sector," said vice-chairman of Indian Technical Textiles Association , S K Sundaraman.

Industrialist say that the 2 % relaxation of excise and 2.5% in customs will bring some relief for them. " We had hoped for some relief in the export segment. Exports from Tiruppur and Coimbatore are significant , and any policy easing export of goods or relaxing norms would benefit the textile industry," said a textile entrepreneur requesting anonymity. " the Rs. 1,840 crore allocation for the textile industry is insufficient as there are backlogs for more than nine months. It will be difficult to hope for any development with the funds allocated, " said the industrialist.

Automobile and manufacturing and pump industries too are in a fix. "several automobile parts are exported from the city. While the announcements to improve the road and rail infrastructure will speed up the transport of good from the city to the ports, decisions at the policy level would have 
brought relief to industrialists." president of Indian chamber of commerce , D Nandakumar told TOI.

Chartered accountant, G Karthikeyan ,  who moderated a panel discussion organized by the Confederation of Indian Industries on Tuesday , said that while the allocations for the industries was good, " is important to see how the government implements the schemes and how well it monitors the process." He also said that the cesses levied by the government in various forms increases the compliance cost. " Industries feel that if there is uniformity in levying cess , it will provide some relief to them," he said.

என்ன எதிர்பார்க்கலாம் இந்த பட்ஜெட்டில்?

ஓர் இடைக்கால பட்ஜெட் மற்றும் ஒரு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து முடித்துள்ளது மத்திய அரசு. பொதுவாக ஆட்சிப் பொறுப்பில் இருகும் அரசாங்கம் தமது கடைசி இரு பட்ஜெட்களை ஜனரஞ்சகமாக தாக்கல் செய்யும். ஆகவே இந்த பட்ஜெட் சற்றே முக்கியத்துவம் பெறுவதாக அமைகிறது. மேலும் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவு வளர்ச்சி இல்லாமல் உள்ள தற்போதைய சூழ்நிலையில் இந்த பட்ஜெட் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி, ஸ்டார்ட்அப் இந்தியா, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதற் கான முயற்சியும் உத்வேகமும் கொடுக்கப்பட்டு வருகிறது. இருந் தாலும், இத்திட்டங்களுக்கான பலனை பொதுமக்கள் உடனடி யாகப் பெறாத உணர்வுடன் இருக்கின்றனர். என்ன எதிர்பார்க்க லாம் இந்த பட்ஜெட்டில்?

தனி நபர் வருமானம்

பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததும் தனி நபர் வருமான வரி வரம்பு ரூபாய் ஐந்து லட்சமாக உயர்த்தப் படும் என பெரும்பான்மையான மக்களால் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. உயர்ந்து வரும் பணவீக்கத்தில் தற்போதைய வரம்பான ரூபாய் 2.5 லட்சத்தை சற்று உயர்த்தி நடுத்தர மக்களுக்கு உதவலாம் என்று பெரும்பான்மை கருத்து நிலவுகிறது.

வீட்டுக் கடன்

சொந்த வீட்டில் வசிப்பவர் வீட்டுக்கடனுக்கான வட்டியாக ரூபாய் இரண்டு லட்சம் வரை மற்ற வருமானத்தில் இருந்து கழித்துக் கொள்ள முடியும். உயர்ந்து வரும் வீடு கட்டும் தொகையை கருத்தில் கொண்டு, சொந்தமாக வசிக்கும் வீட்டுக் கடனுக்கான வட்டியை ரூபாய் இரண்டு லட்சத்தில் இருந்து உயர்த்த வேண்டும். தற்போது வீடு அல்லது ப்ளாட் கட்டி முடிக்கப்படும் முன் கொடுக்கப்படும் வட்டியை வருமானத்தில் இருந்து கழித்துக் கொள்ள முடியாது. இந்த பட்ஜெட்டில் இதற்கு மாற்றம் கொண்டு வர வேண்டும். அதாவது ப்ளாட்டை புக் செய்ததில் இருந்து வாங்கிய கடனுக்கான வட்டியை வருமானத்தில் இருந்து கழித்துக் கொள்ள வழி வகை செய்ய வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

வருமானவரிச் சட்டப் பிரிவு 54 மற்றும் 54F ன் படி நீண்டகால மூலதன லாபத்தை ஒரு புதிய வீட்டில் முதலீடு செய்யும் போது மூலதன லாபத்துக்கு வரி ஏதும் கட்டத் தேவையில்லை. இதுபோல நீண்டகால மூலதன லாபத்தை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது மூலதன வரியில் இருந்து விலக்கு அளிக்க வகை செய்யலாம். இது பங்குச்சந்தையை ஊக்குவிக்கும்.

சரக்கு மற்றும் சேவை வரி (GST)

நுகர்வோருக்கு முழுப்பலனை யும் அளிக்கக்கூடிய GST இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடை முறைக்கு வரும் என்று நிதி அமைச்சர் கடந்த பட்ஜெட் தாக்கலின் போது கூறினார். ஆனால் எதிர்கட்சிகளது ஆதரவு இல்லாததால் இது தாமதம் ஆகிறது. இந்த பட்ஜெட்டில் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்படா விட்டாலும் குளிர்கால கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்பட லாம். இந்த பட்ஜெட்டில் ஜிஎஸ்டி குறித்த ஒரு முதல் வரையறை கொடுக்கப்பட வேண்டும். இந்த மசோதா வருவதால் சேவை மற்றும் உற்பத்தி வரி விகிதத்தில் இந்த பட்ஜெட்டில் பெரிய மாற்றம் இருக்காது.

கார்ப்பரேட் வரி

நிறுவனங்களுக்கான கார்ப்ப ரேட் வரி 30% லிருந்து படிப்படியாகக் குறைத்து சில ஆண்டுகளில் 25% ஆக குறைக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் கூறியிருந்தார். ஆகவே இந்த பட்ஜெட்டில் கார்ப்பரேட் வரி குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கலாம். MAT (Minimum Alternate Tax), அதாவது குறைந்தபட்ச மாற்று வரி, சுமாராக 20% ஆக இருந்து வருகிறது. கார்ப்பரேட் வரி 25% வரை குறைக்கப்படும் என அரசு அறிவித்திருக்கும் நிலையில் இந்த குறைந்தபட்ச மாற்று வரி தற்போதைய 20% லிருந்து குறைக்கப்பட வேண்டும். இந்திய ஏற்றுமதி கடந்த ஆண்டுகளில் குறைந்து வருவதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ரூபாயின் மதிப்பு உலகச் சந்தையில் குறைந்து வரும் நிலையில் ஏற்றுமதி அதிகரித்து இருக்க வேண்டும். ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்களை தொழில் துறைக்கு அறிவிக்க வேண்டும்.

புதிய தொழில் நிறுவனங்களைத் துவங்க தனியார் நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன. வங்கி கடனுக்கான வட்டியைக் குறைக்கும் பட்சத்திலும் புதிய நிறுவனங்களைத் துவங்க சில சலுகைகளைக் கொடுக்கும் பட்சத்தில் தனியார் நிறுவனங்கள் புதிய தொழில் நிறுவனங்களைத் துவங்க ஆர்வம் காட்ட ஒரு வாய்ப்பாக அமையும்.

கருப்புப் பணம்
கடந்த பட்ஜெட்டில் வெளி நாட்டில் கருப்புப்பணம் வைத் திருப்பவர் மீது கடுமையான சட்டம் பாயும் என்று கூறிய நிதி யமைச்சர் அதற்கான சட்டத்தை யும் 2015ல் ஏற்படுத்தினார். ஆனால் 700க்கும் குறைவான மக்களே இந்தச் சட்டப்படி வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணத்துக்கான வரியையும் அபராதத்தையும் செலுத்தினர். உள்நாட்டிலுள்ள கருப்புப் பணத்தை மீட்க இந்தப் பட்ஜெட்டில் சில வருமானவரி மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

மாற்றம் வேண்டும்

வருமான வரிச் சட்டத்தில் பல விதிமுறைகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே சட்டமாக்கப்பட்டு தற்போதைய பணவீக்கத்தை கணக்கில் கொள்ளப்பட்டாமல் இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது. உதாரணமாக குழந்தைகளுக்கான படிப்புச் செலவுகளுக்கான அலவன்ஸ் மாதம் 100 ரூபாயாகவும், ஹாஸ்டலுக்கான அலவன்ஸ் மாதம் 300 ரூபாயும் ஒரு குழந்தைக்கு நிர்ணயம் செய்து அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு அனுமதிக்கப்படுகிறது. இந்த விதிமுறை பல ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்டது. இன்றைய சூழ்நிலையில் ஒரு குழந்தையின் படிப்புச் செலவுக்கு ஆண்டுக்கு சுமார் 40,000 முதல் 4 லட்சம் வரை செலவு செய்யப்படுகிறது.

மேலும் பயணச் செலவுகளுக்கான அலவன்ஸ் மாதம் 1,600 ரூபாயாக இருந்து வருகிறது. சம்பளம் பெரும் வரிதாரர்கள் மாதத்துக்கு 1,600 என்பது குறைவான தொகை இதை அதிகரிக்க வேண்டும். சம்பளம் பெறுபவர்களுக்கு முதலில் இருந்த படி Standard Deduction தொகையை அதிகப்படுத்த வேண்டும். அல்லது வரி விலக்கு வருமானத்தில் இருந்து கொடுக்க வேண்டும்.

மேலும் தற்போது விருப்ப ஒய்வு பெறும் சம்பளதாரர்கள் பெறும் மொத்த தொகையில் ரூபாய் 5 லட்சம் விலக்கு கொடுக்கப்படுகிறது. இதுபோல வீட்டு வாடகை அலவன்ஸ்(HRA) பெறாதவர்களுக்கான வீட்டு வாடகைக்கான கழிவாக Rs.20,000/- அனுமதிக்கப்படுகிறது. தற்போதைய பணவீக்க நிலையில் இவை மிகவும் குறைவான தொகை. இவற்றைச் சரி செய்யும் சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப் பட வேண்டும். இதனை இந்த பட்ஜெட்டில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்.

ஆடிட்டர். ஜி.கார்த்திகேயன் - karthikeyan.auditor@gmail.com

பட்ஜெட் எதிர்பார்த்ததும், கிடைத்ததும்

பட்ஜெட்டுக்கு முன்னால் தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வு அறிக்கை, நாட்டின் பொருளாதார நிலை குறித்த தகவல்களை தருவதுடன், பட்ஜெட்டுக்கு ஒரு முன்னோட்டத்தை அறிவிக்கும் விதமாகவும் இருக்கும். ரூபாய் 1 லட்சம் கோடி மானியத்தில், பெரும்பான்மையான தொகை வசதி படைத்த பணக்காரர்களுக்குத்தான் சென்று அடைகிறது மற்றும் 7வது ஊதிய கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த சுமார் ரூபாய் 1.2 லட்சம் கோடி அளவில் தேவைப்படுகிறது என்றும் அதில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த பட்ஜெட்டில் 9 தூண்கள் என்று விவசாயம், ஊரகத்துறை, சமூக நலத் துறை, கல்வித் துறை, கட்டமைப்பு, நிதித் துறை சீர்திருத்தம், எளிதாக வர்த்தகம் புரிதல், வரி சீர்திருத்தங்கள் என்று பிரித்து ஒவ்வொரு துறைக்கும் முக்கியத்துவம் கொடுத்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி வரம்பு உயர்த்தப்படும் என்று ஏராளமானவர்கள் எதிர்பார்த்த நிலையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வருமான வரிப் பிரிவு 87ஏ யின் கீழ் ஆண்டுக்கு ரூபாய் 5 லட்சத்துக்கும் குறைந்த வருமானம் உள்ளோருக்கு கூடுதலாக ரூ.3,000 மட்டும் வரிச்சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. வருமான வரி விகிதங்களில் மாற்றம் ஏதும் இல்லை.

நிதி அமைச்சரின் சிரமம் புரிகிறது. இந்திய மக்கள் தொகையான 125 கோடியில் சுமார் 5% மட்டுமே வரி செலுத்துவதாக உள்ள நிலையில் வரி வரம்பை உயர்த்த முன் வரவில்லை.

உத்தேச வரி

சிறு மற்றும் நடுத்தர தொழில் புரிவோருக்கு உதவும் வகையில் வருமான வரிப்பிரிவு 44ADன் படி 2 கோடி ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்பவர்கள் கணக்கு புத்தகம் ஏதும் பராமரிக்கப்பட வேண்டியதில்லை. உத்தேச வரியாக விற்பனையில் 8% லாபமாக காண்பித்து அதற்கான வரியை செலுத்தினால் போதுமானது. அதேபோல புரபஷனல்ஸ் என்று சொல்லக்கூடிய மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள் போன்றோர் தங்களது மொத்த வருமானம் ரூ.50 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால் உத்தேச வருமானமாக 50%-ஐ காண்பித்து அதற்கான வரியை செலுத்தினால் போதுமானது. கணக்கு புத்தகம் ஏதும் பராமரிக்கப்பட வேண்டியதில்லை. இந்த வரம்பிற்கு கீழ் லாபம் காட்டினால் கட்டாய தணிக்கை செய்ய வேண்டும்.

நிறுவன வரி (Corporate Tax)

வரும் ஆண்டுகளில் மானியங்கள் குறைக்கப்பட்டு வரி விகிதமும் குறைக்கப்படும் என்று ஏற்கனவே அரசு அறிவித்து இருந்தது. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி செலவுக்கணக்கில் முழு சராசரி (weighted average) யாக, நிதியாண்டு 2016-17 க்கு 150% ஆகவும் 2017-18 க்கு 100% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. துரிதத் தேய்மானம் காற்றாலை (windmill) போன்ற சில இயந்திரங்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த துரிதத் தேய்மானம் (Accelerated Depreciation) 2017 ஏப்ரல் 01 லிருந்து அதிகபட்சமாக 40% ஆக மட்டுமே அனுமதிக்கப்படும். 2020 மார்ச் 31 வரை நிறுவப்படும் சிறப்பு ஏற்றுமதி மண்டல (SEZ) தொழில் நிறுவனங்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.

புதிதாக அதாவது 01.03.16 க்கு பிறகு உற்பத்தி செய்ய நிறுவப்படும் நிறுவனங்களுக்கு வருமான வரி 25% குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிறுவனங்கள் துரிதத் தேய்மானம் மற்றும் முதலீட்டு சலுகைகள் எடுத்துக் கொள்ள முடியாது. இந்த ஆண்டிலிருந்து ரூபாய் 5 கோடிக்கு மிகாமல் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு வருமான வரிவிகிதம் 29% குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனங்களுக்கு வரி மற்றும் கூடுதல் வரியும் பொருந்தும்.

ஸ்டார்ட்அப் (Start-up) நிறுவனங்கள்
புதிய தொழிலதிபர்களை உருவாக்குவதில் முனைப்பு கொண்டிருக்கும் இந்த அரசு 2016 ஏப்ரல் 01 முதல் 2019 மார்ச் 31 வரை நிறுவப்படும் நிறுவனங்களுக்கு, அதாவது 5 ஆண்டுகளில் முதல் 3 ஆண்டுகள் 100% லாபத்திலிருந்து விலக்கு கொடுக்க வகை செய்துள்ளது. ஆனால் இந்த நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச மாற்று வரி பொருந்தும் (minimum alternative tax).

பட்டியலிடப்படாத (Unlisted) நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யும்போது ஏற்படும் லாபத்திற்கான நீண்டகால மூலதன ஆதாயம் 3 ஆண்டிலிருந்து 2 ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது. வியாபாரத்தை எளிதில் துவங்கும் வகையில் நிறுவனங்கள் ஒரே நாளில் பதிவு செய்ய கம்பெனி சட்டத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

கருப்புப்பணம்

தாமாக முன்வந்து கணக்கில் காண்பிக்காத பணத்தை 45% வரி மற்றும் உபரித் தொகையாக செலுத்தும் பட்சத்தில் எந்தவித கேள்வியும் அபராதமும் சிறை தண்டணையும் இல்லாமல் ஏற்று கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார். இத்திட்டம் 01.06.15 முதல் 30.09.16 வரை நடைமுறையில் இருக்கும். இந்த திட்டத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றாலும் இதனை அதிகம் பேர் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புண்டு.

டிவிடெண்ட் விநியோக வரி
பட்டியலிடப்படாத (Unlisted) நிறுவனங்களின் பங்குதாரர்களுக்கு கொடுக்கப்படும் டிவிடெண்ட் தொகைக்கு டிவிடெண்ட் விநியோக வரி (Dividend Distribution Tax) நிறுவனம் கட்ட வேண்டும். அதில் ஒரு மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்படி அளிக்கப்படும் டிவிடண்ட் தொகை ரூ.10 லட்சத்திற்கு அதிகமாகும் பட்சத்தில் இதை பெறும் பங்குதாரர்கள் 10% வரி கட்ட வேண்டும். இந்த மாற்றத்தால் பங்கு சந்தையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

வரி சீர்திருத்தங்கள்

வருமான வரி கட்டுபவர்களுக்கான நடைமுறைகளை சுலபமாக்கும் வகையில் இமெயில் மூலமாக கேள்விகள் கேட்கப்பட்டு வருமான வரிக் கணக்கை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்தியாவில் 7 பெரு நகரங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்த உள்ளது.

வருமான வரி அதிகாரங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது, அபராத தொகையாக காண்பிக்கப்படாத வருமானத்திற்கான வரியாக 100% லிருந்து 300 % வரை விதிக்க வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது.

தற்போது இது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தங்களது வருமானத்தை குறைவாக காண்பிக்கும்பட்சத்தில் அபராத தொகை 50% ஆகவும், வருமானத்தை உண்மைக்கு மாறாக தவறாக காண்பிக்கப்படும் பட்சத்தில் அபராதமாக 200% ஆகவும் மாற்றப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பில் ஈடுபடுவோருக்கு இது பலத்த அடியாக இருக்கும்.

வருமான வரி மேல் முறையீட்டுக்கு செல்பவர்களுக்கு சில சாதகமான நடைமுறை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வரித் தொகையில் 15% கட்டினால் மேல் முறையீடு முடியும் வரை நிறுத்திவைக்க (Stay) கொடுக்க வரி அதிகாரிகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக உலக அளவில் பேசப்பட்டது வோடாபோன் நிறுவன வருமான வரி வழக்கு. இந்த வழக்கிற்கு பிறகு வருமான வரிச்சட்டத்தில் வரிப்பிரிவு 9-ல் கொண்டு வரப்பட்ட மாற்றம் பழைய ஆண்டுகளுக்கும் பொருந்தும் என்று கூறியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த பட்ஜெட்டில் பழைய ஆண்டுகளுக்கான சட்டத்தில் கணக்கை மறுபரிசீலனை செய்தால் வருவாய் செயலர் தலைமையில் உள்ள உயர்நிலை கமிட்டியின் ஒப்புதலுக்குப் பின் தான் செய்ய முடியும் என்ற மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த பட்ஜெட் வெகு ஜனங்களுக்கும், கீழேயுள்ள நடுத்தர மக்களுக்கும் ஏற்ற வகையில் தாக்கல் செய்யபட்டுள்ளது. 9 தூண்களுக்கான திட்டங்கள் சரியான முறையில் செயல்படுத்தப்பட்டால் நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும் என்பதில் சந்தேகம் இல்லை.
karthikeyan.auditor@gmail.com

Stress on Monitoring, Implementation

The Union Government should have a road-map for implementation of the projects, in the nine major areas, proposed in the Union Budget, according to speakers at a panel discussion, which was a part of the session on post budget analysis, organised by the Confederation of Indian Industry – Coimbatore Zone here on Wednesday ( Coimbatore , march 2 , 2016) .

Chartered accountant G. Karthikeyan, who was the moderator for the panel discussion, said the expectations from the budget were high this year and though it is not a populist one, it is seen as a “pro-poor budget”.

While the allocations for sectors such as agriculture, rural, and infrastructure are welcome measures, the Government should develop a mechanism to monitor and implement the proposals.

It should have a road-map for each of the major sectors that the budget gives thrust to.

K. Ilango, former chairman of CII – Coimbatore Zone, said the government has increased allocation for rural sector, and agriculture.

But the delivery mechanism needs to be improved so that the benefits reach the targeted beneficiaries.
When the country is moving towards Goods and Services Tax, the taxation system is only getting complicated for those in business.

The budget does not seem to encourage the manufacturing sector, though the government is focusing on Make in India.

IT entrepreneur N.K. Anand said the contribution of IT and ITES to the economy is huge though it employs less than 1 per cent of the population.

Growth

Substantial growth in the economy in the last one year is because of this sector and the budget is positive for the IT and ITES segments.

According to S.K. Sundararaman, former chairman of CII – Coimbatore Zone, when the global economy is going through a phase of slowdown, the focus of the budget should have been on industries.
The textile industry is going through unprecedented sluggishness and the budget does not have much for the sector.

C. Ramasamy, former Vice-Chancellor of Tamil Nadu Agricultural University, said that there are some positive developments in the budget for the agricultural sector.
In the last two years the sector did not attract attention. Now, there is a change as there is thrust on agriculture.

Though it is one of the main areas that the government has given attention to, income of the farmers should grow by 20 per cent every year.

In the last few years, the sector has grown by just about 3 per cent annually.
The allocation for segments such as research and development, and organic farming should have been more.

வரி ஏய்ப்பு: மொரிஷியஸின் பிடி இறுகுகிறதா?

இந்தியாவுக்கும் மொரிஷியஸுக் கும் இடையேயான 30 ஆண்டு காலமாக இருந்த ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே எதிர்பார்த்து வந்த இந்த மாற்றம் கடந்த வாரத்தில் நடந்திருக்கிறது. என்ன மாற்றம் என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு வரி சொர்க்க நாடுகள் என்றால் என்ன என்று பார்த்துவிடலாம்.

வரி சொர்க்க நாடுகள்

வருமான வரி எந்த நாட்டில் மிகக் குறைவாகவோ அல்லது வரியே இல்லாமல் இருக்கிறதோ அந்த நாடுகள் வரி சொர்க்க நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. உதாரணமாக மொரிஷியஸ், கேமன் ஐலன்டு, பஹாமா, சைப்ரஸ், பனாமா போன்ற நாடுகள் வரி சொர்க்க நாடுகளாக கருதப்படுகின்றன. வரி சொர்க்க நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மூலம் செய்யப்படும் முதலீட்டின் டிவிடென்டுக்கான வரி (Dividend Tax) மற்றும் பங்குகள் விற்கும் போது ஏற்படும் நீண்ட கால மூலதன லாபத்திற்கும் (Capital Gain) வரி செலுத்தத் தேவை இல்லை.


இந்தச் சலுகையைப் பயன்படுத்த வளர்ந்த நாடுகள் தங்களது முதலீட்டை இந்த வரி சொர்க்க நாடுகள் மூலமாக வளரும் நாடுகளில் முதலீடு செய்கின்றன. உதாரணமாக அமெரிக்க முதலீட்டாளர் இந்தியாவின் பங்குகளில் நேரடியாக முதலீடு செய்யும் பட்சத்தில், இந்தப் பங்குகளுக்கான டிவிடெண்ட் அல்லது மூலதன லாபம் (Capital Gain) பெறும்போது அது வருமான வரிக்கு உட்பட்டது. ஆனால் மொரிஷியஸ் நாட்டில் உள்ள நிறுவனம் மூலம் இங்கு முதலீடு செய்து, அதன் மூலம் பெறப்படும் டிவிடென்ட் மற்றும் நீண்ட கால மூலதன லாபத்திற்கு வரி செலுத்த வேண்டியதில்லை.

மொரிஷியஸ் நாட்டில் மூலதன லாப வரி மற்றும் டிவிடென்டிற்கான வரி ஏதும் இல்லை. இதற்காக இந்தியாவும் மொரிஷியஸும் இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன. 30 ஆண்டுகாலமாக இருக்கும் இந்த ஒப்பந்தத்தை சிலர் வரி துஷ்பிரயோகம் செய்வதாக வருமான வரித் துறையினர் கூறி வருகின்றனர். இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகளோ அல்லது சில தொழில் அதிபர்களோ தங்களது கணக்கில் செலுத்தாத அல்லது வருமான வரி செலுத்தாத பணத்தை வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்று மீண்டும் மொரிஷியஸ் நாட்டில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்து, அந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்வது நடைமுறையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதைத்தான் சுழற்சி முதலீடு (Round Tripping) என்று சொல்லுவார்கள்.

இதை சரி செய்யும் விதமாக தற்போது இந்தியாவிற்கும் மொரிஷியஸ் நாட்டிற்கும் உள்ள இரட்டை வரித் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் சில மாற்றங்களை செய்துள்ளனர். இதுவரை மொரிஷியஸில் உள்ள நிறுவனங்கள் மூலம் இந்தியாவில் செய்யப்படும் முதலீட்டிற்கான மூலதன லாப வரி இதுவரை செலுத்த வேண்டியதில்லை என்று இருந்தது. தற்போது இந்த லாபத்திற்கும் வரி செலுத்த வேண்டும் என்ற நிலை வந்துள்ளது.

அதாவது, 01.04.2017-க்கு பிறகு மொரிஷியஸ் மூலமாக இந்தியாவுக்கு வரும் முதலீட்டுக்கு கிடைக்கும் லாபத்துக்கு வரி செலுத்த வேண்டும். இது சாதாரணமாகக் கட்டப்படும் வரியில் 50% வரி செலுத்த வேண்டும். அதாவது தற்போது 15% மூலதன லாப வரி (Capital Gains tax) என்று வைத்துக் கொண்டால் அதில் 50% (7.5%) ஆக வரி கட்ட வேண்டும். 2019 ற்கு பிறகு இதற்கான முழு வரியையும் செலுத்த வேண்டும்.

மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள்

இந்த மாற்றத்தால் மொரிஷியஸ் நாட்டில் இருந்து இந்தியாவில் முதலீடு செய்யப்படும் அந்நிய நேரடி முதலீட்டின் பங்குகளை விற்கும் பட்சத்தில் இந்தியாவில் வரி செலுத்தப்பட வேண்டும். 2019-ம் ஆண்டு வரை இந்தியாவின் பங்குச் சந்தையும் வளர்ச்சியும் ஆரோக்கியமானதாக இருக்கும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம். இந்தச் சூழ்நிலையில் ஈட்டக்கூடிய லாபத்திற்கு 7.5% வரி செலுத்துவது என்பது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஒரு பெரிய வரிச் செலவாக இருக்காது.

அதாவது வோடஃபோன் போன்ற நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட வரி ஓர் எதிர்பாராத சுமையாகக் கருதப்பட்டு அந்நிய நிறுவனங்களுக்கு ஒரு நிரந்தரமற்ற நிலை ஏற்பட்டது. தற்போது மொரிஷியஸ் நாட்டின் மூலம் செய்யப்படும் முதலீட்டுக்கான வரிச்செலவு குறித்து ஒரு தெளிவு ஏற்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் அதிக அளவு வரிச் சச்சரவுகளை (disputes) அரசாங்கம் குறைக்க வாய்ப்பாக இருக்கும்.

மேலும் இந்தச் சட்டத்தில் “Grand Fathering Provisions” படி இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே செய்யப்பட்ட பரிவர்த்தனை (Transactions) அதற்கான வரிச்சட்டத்தில் மாற்றம் ஏதும் இருக்காது.

மூதாதைய விதிமுறைகள் (Grand Fathering’s)

முப்பது ஆண்டுகளாக இருந்த ஒப்பந்தத்தில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதால் பல குழப்பங்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளன. அதனால் இந்த ஒப்பந்த மாற்றம் 01-04-2017 க்கு பிறகு செய்யப்படும் முதலீடுகளுக்குத்தான் பொருந்தும். இதற்கு முந்தைய தேதியில் செய்யப்பட்டிருக்கும் முதலீடுகளுக்கு பழைய விதிமுறைகளே பொருந்தும். இதைத்தான் மூதாதைய விதிப் பொருத்தம் (Grandfather Provisions) என்று கூறுவார்கள்.

சமீப காலமாக சிங்கப்பூர் வழியாக அந்நிய முதலீடுகள் இந்தியாவுக்கு வருகின்றன. ஆகையால் சிங்கப்பூர் நாட்டிற்கும் இந்த இரட்டை வரித் தவிர்ப்பு ஒப்பந்த மாற்றம் கொண்டு வரப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது. ஆனால் சிங்கப்பூருக்கு கொண்டு வரப்படும் ஒப்பந்த மாற்றத்தில் மொரிஷியஸ் நாட்டிற்கு செய்யப்பட்ட மூதாதைய விதிமுறைகள் போல இருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதுபோல இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள மற்ற நாடுகளிலும் விதிகளில் மாற்றம் வருமா என்பதையும் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கடந்த ஐந்தாண்டுகளில் இந்திய நிறுவனங்களில் செய்யப்பட்டுள்ள நேரடி முதலீட்டில் 61 சதவீதத்துக்கு மேல் மொரிஷியஸ் நாட்டின் மூலம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சமீப காலமாக ஒப்பந்த துஷ்பிரயோகம் (‘Treaty Abuse’) மற்றும் சுழற்சி முதலீடு (‘round tripping’) முறை மூலம் இந்தியாவில் வரி செலுத்தாத பணம் மொரிஷியஸ் நாட்டு முதலீடு மூலம் இந்தியாவிற்குள் மீண்டும் கொண்டு வருவதாக அதிக அளவில் பேசப்பட்டது.

இந்த ஒப்பந்த மாற்றத்தின் மூலம் இந்தியாவில் வரி சம்பந்தமான கொள்கைகள் எதிர்பார்க்கக் கூடியதாகவும் அறுதியிடபட்டவையாகவும் இருக்கும் என்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அதிக நம்பகத் தன்மையை கொடுக்கவும் வாய்ப்பாக அமையும். அந்த வகையில் மொரி ஷியஸ் நாட்டு இரட்டை வரி ஒப்பந்த மாற்றம் குறைந்தகால அவகாசத்தில் வரிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும், நீண்ட காலத்திற்கு இந்தியா மீதான நம்பிக்கை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அதிகம் இருக்கும் என்று நம்பலாம்.
ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்
karthikeyan.auditor@gmail.com

Tuesday 3 May 2016

Focus on low cost housing


Owning a home is everyone’s dream, irrespective of affordability and cost. Some have achieved this and for many others it remains a dream.
There is severe shortage of housing, especially in urban areas in the country. Developers tend to invest in and develop big housing projects as that brings in more money and profits. Also, catering to the low income groups has its own challenges in terms of limited credit history of buyers, irregular cash flows and income of such buyers, and the impact of inflation and interest revisions on these buyers.
However, affordable housing is a segment of huge opportunity in terms of market size. With increasing urbanisation, it is estimated that by 2030, as many as 600 million people will call urban India their home - a growth of 59 per cent over 2011. This will definitely create an undue amount of pressure on urban infrastructure, especially housing.
In the light of these facts, affordable housing is a notion whose time has come.
Unless we think seriously about affordable housing, millions will go homeless in urban India and a clean and healthy environment with access to sanitation will remain a dream.
In the union budget this year, the Finance Minister came up with some noteworthy “push” factors to make low cost housing affordable and attractive - both to buyers and developers. The budget provisions state that 100 per cent deduction for profits are allowed to an undertaking in housing projects for flats up to 30 sq. metres in the four metropolitan cities and 60 sq. metres in other cities for projects approved during June 2016 to March 2019 and completed within three years. Minimum Alternate Tax (MAT) would still apply. This exemption for affordable housing projects would bring in a 15 per cent to 20 per cent upside on profits after paying MAT, for a real estate developer undertaking such a project. It would also make it easier for the developer to attract foreign and domestic investment for housing projects. Additionally, the budget provides that construction of affordable houses up to 60 square metres under any scheme of the Central or State Government including PPP Schemes will be exempt from service tax.
First time home buyers will also get a deduction for additional interest of Rs. 50,000 per annum for loans of up to Rs. 35 lakh sanctioned in 2016-17. These measures are designed to get developers to redeploy money towards building more affordable housing.
With 90 per cent of the demand in housing being in this sector, the budgetary provisions have tried to ease some of the supply side constraints. There are additional supply side constraints in terms of land availability, which is the most basic requirement for housing. With the government thinking seriously about digitising land records, perhaps this might ease the problem of encumbrances and other such land related issues and make it simpler for developers to obtain the required land.
It must also be mentioned that the three year window for completion of projects may cause some hardship to developers unless there is a process of single window clearance for all the municipal, local and other permissions required prior to starting a project. Construction of low cost houses has never been the focus area for majority of builders. With the recent focus of the Government towards affordable houses with tax sops, incentives, waiver of service tax etc., the time has come for a major shift of focus to low cost housing. The current policies of the government are a step in the right direction and will give a fillip to the cause of affordable housing which is affordable from the buyer’s standpoint and profitable for the developers.

Monday 29 February 2016

பட்ஜெட் - 2016 நிதித் துறையில் எதிர்பார்க்கப்படும் தனிநபர் வரிச் சலுகைகள்!

‘‘சொந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தாலும் வரிச் சலுகை வேண்டும்!’’

ஆடிட்டர். ஜி. கார்த்திகேயன், கோவை.

‘‘வீட்டுக் கடனுக்கான வட்டி தற்போது வீட்டுக் கடன்  மூலம் வாங்கிய  வீட்டில் வசித்தால் ரூ.2 லட்சம் வரையிலும், அந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால் வரம்பு ஏதும் இல்லாமல் வட்டியை மொத்த வருமானத்தில் இருந்து கழித்து வரிச் சலுகை பெறலாம்.
இனி, வீட்டுக் கடன் மூலம் வாங்கிய வீட்டில் குடியிருந்தாலும் வரம்பு ஏதும் இல்லாமல் வட்டியை வருமானத்தில் இருந்து கழிக்க அனுமதிக்க வேண்டும். 

வீட்டைக் கடன் வாங்கி கட்டினால் அல்லது வாங்கினால் கட்டுமானக் காலத்தில் வட்டியை தற்போது வருமானத்தில் இருந்து கழிக்க அனுமதிக்கப்படுவதில்லை. 

உதாரணமாக, ஒரு ஃப்ளாட் ஒன்றுக்கு முன்பணம் கொடுத்து பதிவு செய்து அந்த ஃப்ளாட் கட்டப்படும் நிலையில் அதற்காக கொடுக்கப்படும் வட்டி வருமானத்தில் இருந்து கழிக்கப்பட அனுமதிக்கப்படு வதில்லை. அந்த ஃப்ளாட் கட்டி முடித்தபின் அதில் குடிபுகுந்த பின்னரே அனுமதிக்கப் படுகிறது. 

இது ஃப்ளாட் புக் செய்தபின் வாங்கிய கடனுக்காகக் கொடுக்கப்படும் வட்டியை வருமானத்தில் இருந்து கழிக்க அனுமதிக்க வேண்டும். வீட்டு விற்பனை மந்தமாக இருக்கும் சூழ்நிலையில் இத்தகைய வருமான வரி சம்பந்தப்பட்ட ஊக்கங்கள் உத்வேகத்தைக் 
கொடுக்கும்.  

நீண்ட கால மூலதன ஆதாயத்தை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போதும் வரிச் சலுகை வழங்க வேண்டும். இதனால் பங்குச் சந்தை மற்றும் சேமிப்பும் முன்னேற்றமடையும். 

வருமான வரி செலுத்துவோருக்கு கொடுக்கப்படும் வரிக்கான ரீஃபண்ட் உடனடியாக கொடுக்கப்படுவதில்லை என்பது பொது மக்களின் கருத்து. இதற்குக் காரணம், வரிப் பிடித்தம் (TDS) அதிகமாக இருப்பது. ஆகவே, சில வகை பரிவர்த்தனைகளுக்கான 
டிடிஎஸ் தொகையைக் குறைக்கலாம்.’’

Tuesday 16 February 2016

Budget 2016-17 - What should the Central Government do?

2016-17 ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்?

ஆடிட்டர். ஜி. கார்த்திகேயன், கோவை
 
'' வீட்டுக் கடனுக்கான வட்டி தற்போது, வீட்டில் வசித்தால் இருந்தால் ரூ. 2 லட்சம் வரையிலும்,  வாடகைக்கு விட்டிருந்தால்  வரம்பு ஏதும் இல்லாமல் வட்டியை மொத்த வருமானத்தில் இருந்து கழித்து வரிச் சலுகை பெறலாம். வீட்டில் குடியிருந்தாலும் வரம்பு ஏதும் இல்லாமல் வட்டியை வருமானத்தில் இருந்து கழிக்க அனுமதிக்க வேண்டும்.  வீட்டை கடன் வாங்கி கட்டினால், அல்லது வாங்கினால் கட்டுமானக் காலத்தில் வட்டியை தற்போது வருமானத்தில் இருந்து கழிக்க அனுமதிக்கப்படுவதில்லை.
 
உதாரணமாக ஒரு ஃப்ளாட் ஒன்றுக்கு முன்பணம் கொடுத்து பதிவு செய்து அந்த ஃப்ளாட் கட்டப்படும் நிலையில் அதற்காக கொடுக்கப்படும் வட்டி வருமானத்தில் இருந்து கழிக்கப்பட அனுமதிக்கப்படுவதில்லை. அந்த ஃப்ளாட் கட்டி முடித்த பின் அதில் குடி புகுந்த பின்னரே அனுமதிக்கப்படுகிறது.  இது ஃப்ளாட் புக் செய்தபின் வாங்கிய கடனுக்காகக் கொடுக்கப்படும் வட்டியை வருமானத்தில் இருந்து கழிக்க அனுமதிக்க வேண்டும். வீட்டு விற்பனை மந்தமாக இருக்கும் சூழ்நிலையில் இத்தகைய வருமான வரி சம்பந்தப்பட்ட ஊக்கங்கள் உத்வேகத்தைக் கொடுக்கும்.

மூலதன ஆதாய வரி:
  
நீண்டகால மூலதன ஆதாயத்தை (Long Term Capital Gain) வருமான வரிச் சட்டப் பிரிவு  [ 54,  54 (f)- ன் படி ஒரு வீட்டில் முதலீடு செய்வதன் மூலம் ஒரு சொத்தை விற்பதன் மூலம் ஏற்படும் வரி கட்டுவது தவிர்க்கப்படுகிறது.  அதேபோல  நீண்ட கால மூலதன ஆதாயத்தை  மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் போதும் வரிச் சலுகை வழங்க வேண்டும். இதனால் பங்குச் சந்தை மற்றும் சேமிப்பும் முன்னேற்றமடையும். 
 
இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் வருமான வரி வரம்பு 5 லட்சமாக உயர்த்தப்படும் என்று அனைவரும் அதிகமாக எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் கடந்த ஆண்டு ரூ. 50,000 தான் உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு வருமான வரி வரம்பு சற்றே உயரலாம் என்று எதிர்ப்பார்க்கலாம். 
 
“மேக் இன் இந்தியா” என்பது இந்த அரசின் முக்கிய கொள்கை. இந்தத் திட்டத்தில் ஈடுபடுவோருக்கு வரிச் சலுகைகள், அதிக தேய்மானம் மற்றும் இதர சலுகைகளை வழங்கும்பட்சத்தில் இந்த புதிய மேக் இன் இந்தியா திட்டம் வெற்றி பெற வாய்ப்பாக இருக்கும். . 
 
வருமான வரி செலுத்துவோருக்கு கொடுக்கப்படும் வரிக்கான ரீஃபண்ட் உடனடியாக கொடுக்கப்படுவதில்லை என்பது பொது மக்களின் கருத்து. இதற்குக் காரணம் வரிப் பிடித்தம் (TDS) அதிகமாக இருப்பது. ஆகவே சில வகை பரிவர்த்தனைகளுக்கான டிடிஎஸ் தொகையைக் குறைக்கலாம்.'' என்றார்.

Swachh Bharath, CSR and Start Up

The Swachh Bharat Abhiyan or the “Clean India” campaign is also an opportunity for start-ups and Corporates.

The idea behind the movement is to gradually stop open defecation and control the diseases caused by it. It offers myriad opportunities for start-up business and for fulfilment of social responsibility objectives of corporates.

A majority of the Indian population has mobile phones but they do not have access to toilets – and that is a telling fact. Hygiene takes a back seat in rural as well as urban India, especially among the low income groups.

Here is how this campaign is an opportunity – the cost of constructing a toilet is estimated to be Rs. 20,000. Of this, the central government will subsidise Rs.4,000 and the State and local bodies will provide subsidy of Rs. 2,000 each.

That means the actual cost incurred by the individual is Rs. 12,000.
Construction start-ups who do not have heavy capital to invest can use this opportunity to start construction projects on smaller scale.

Funding can be obtained easily as overall costs are much less compared to standard construction projects and these provide a solid base for small start-ups to expand prudently without singeing their hands in large investment/capital heavy projects. This provides great opportunity to those who aspire to be entrepreneurs.

Corporates in India are duty bound to spend two per cent of their profits in social responsibility projects. This should be implemented under the Companies Act 2013. Section 135 of the Companies Act provides the threshold limit for applicability of the CSR to a Company i.e. (a) net worth of the company to be Rs 500 crore or more; (b) turnover of the company to be Rs. 1,000 crore or more; (c) net profit of the company to be Rs 5 crore or more.

Further as per the CSR Rules, the provisions of CSR are not only applicable to Indian companies, but also applicable to branch and project offices of a foreign company in India. Every qualifying company requires spending of at least two per cent of its average net profit for the immediately preceding three financial years on CSR activities.

From construction to fulfilling corporate social responsibility objectives, the Swachh Bharat Abhiyan is an opportunity.

While constructing toilets across India has gathered momentum, with nearly 95 lakh toilets being built in a year, usage levels are still low.

The north east seems to have done the best with usage being 100 per cent, but elsewhere toilet usage remains at   46 per cent to 50 per cent. Perhaps, it would be a good idea for corporates to also undertake hygiene education as part of CSR activities so that the effort of building toilets is not wasted.
India has long wilted under the scourge of public defecation.

It is a matter of shame on the world stage that a country of technology experts still has open defecation. The public and the private sector are now geared to meet this challenge and make India healthier and cleaner in every sense.

G. Karthikeyan
(The author is a Coimbatore-based chartered accountant)

Abroad Study Expenses - How much does RBI allow?

வெளிநாட்டுப் படிப்புச் செலவுக்கு எவ்வளவு அனுப்ப ரிசர்வ் வங்கி அனுமதிக்கிறது?

ஆடிட்டர் ஜீ.கார்த்திகேயன்  பன்னாட்டு வரி ஆலோசகர், கோவை
தீப்தி மாதவன் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். தனது இன்ஜினீயரிங் பட்டப்படிப்பை பெங்களூரில் உள்ள முன்னணி கல்லூரியில் சமீபத்தில் படித்து முடித்தார். அவரது தந்தையின் தொழிற்சாலையில் சேர்வதா அல்லது வேறு ஏதாவது பன்னாட்டு கம்பெனியில் சில காலம் வேலை செய்ய வைக்கலாமா என்று வீட்டில் அனைவரும் யோசித்துக் கொண்டிருந்தார்கள். தீப்தி கர்நாடக சங்கீதத்தில் அதிக ஆர்வமுடையவர். சிறுவயது முதலே ஏராளமான கச்சேரிகளையும் செய்து வந்தவர். ஆறு வயது இருக்கும் போதே, அவரது மாமாவின் கர்நாடக இசை ஞானத்தால் கவரப்பட்டு தொடர்ந்து பயிற்சி பெற்று வந்தவர். தனது படிப்புடன் தொடர்ந்து சங்கீதத்திலும் ஈடுபாடு கொண்டிருந்த தீப்தி தனது இன்ஜினீயரிங் படிப்பை முடித்தவுடன் தடாலடியாக தனது பெற்றோர்களிடம் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள இசைக் கல்லூரியில் சேர்வதாகக் கூறினார். பட்டப் படிப்பிற்கும் மேல் படிப்பிற்கும் சம்பந்தம் இல்லாததால் பெற்றோர்கள் ஷீலாவும் மாதவனும் நீண்ட யோசனைக்குப் பின் ஒத்துக் கொண்டார்கள்.

ஹாலிவுட் நகரில் அமைந்த இசைக் கல்லூரியானதால் அங்கு இடம் கிடைப்பது கஷ்டமான விஷயம். ஆனால் தீப்தியின் இசை ஆர்வத்தாலும் அவரது மாமாவின் சங்கீதத்தில் அதிகப் பிரசித்தி பெற்று பலரையும் தெரிந்திருந்ததால் அமெரிக்க இசைக்கல்லூரியில் அட்மிஷன் சிரமமில்லாமல் கிடைத்து விட்டது. இப்போது அமெரிக்கா செல்ல தீப்தி தயார்.

கல்லூரிக் கட்டணம், தங்கும் வீடு, மற்ற செலவுகள் அந்நியச்செலாவணியில் செய்ய வேண்டும். ரிசர்வ் வங்கி எவ்வளவு அனுமதிக்கிறது என்று ஆராயத் தொடங்கினார் மாதவன்.

உத்தேசமாக ஆண்டுக்கு 60,000 டாலர் வரை செலவாகும் என்று கணக்கிட்டார். இந்தத் தொகையை வங்கி மூலம் மாதந்தோறும் அனுப்பலாம் என்று முடிவு செய்தார். இதற்கு முன் அனுமதி ஏதேனும் தேவையா?
ஆண்டிற்கு 1,00,000 டாலர் வரை படிப்பு செலவு மற்றும் பராமரிப்பு செலவுக்காக வெளிநாட்டிற்கு அனுப்ப  ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கிறது. இத்தொகையை விட கூடுதலாகத் தேவைப்பட்டால் வெளிநாட்டுப் பல்கலைகழகத்தின் உத்தேச மதிப்புப்படி (Estimate)  அந்நியச்செலாவணியை வெளிநாடு அனுப்ப ரிசர்வ் வங்கி அனுமதிக்கிறது. மேல் படிப்பிற்காக பணம்  அனுப்ப எளிமையான படிவம் (FORM) A-2 ஐ தாக்கல் செய்ய வேண்டும்.  இது தவிர வேறு எந்தப் படிவமும் வேண்டியதில்லை.  வெளிநாடு செல்லும் மாணவரது வங்கிக் கணக்கில் இருந்து இந்தத் தொகையை அனுப்ப முடியும். வங்கிக்கடன் முலமாக பெறப்பட்டத் தொகையையும் அனுப்பலாம்.
உறவினர்கள் இந்தத் தொகையை அனுப்ப முடியுமா?

நெருங்கிய உறவினர்களும் படிப்பு மற்றும் பராமரிப்புச் செலவை அனுப்ப முடியும். நெருங்கிய உறவினர்கள் எனப்படுபவர்கள் கீழ்க்கண்டவர்கள் அடங்குவர்.
 ·    ஒரே இந்துக் கூட்டுக் குடும்பத்தின் உறுப்பினர்
 ·    கணவன் மற்றும் மனைவி
 ·    பெற்றோர்
 ·    பிள்ளைகள்
 ·    மருமகன் மற்றும் மருமகள்
 ·    சகோதர சகோதரியர் மற்றும் அவர்களுடைய துணைவியர்
 ·    தாத்தா மற்றும் பாட்டி
 ·    பேரன் மற்றும் பேத்தி

மேலும் மாணவரது பெயரில் உள்ள Resident Foreign Currency Account அல்லது Exporter Earnings Foreign Currency Accounts ல் இருந்தால் எந்தவித  அதிக வரம்பும் இல்லாமல் வெளிநாட்டுக்கு அனுப்ப முடியும்.
தாராளமாக மேல்நாட்டுப் படிப்புக்காக ரிசர்வ் வங்கியின் விதிகளால் அமெரிக்காவுக்கு தீப்தியை அனுப்ப அவரது பெற்றோர்கள் மற்ற வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தார்கள். இசைத்துறையில் வித்தியாசமான ஒரு புதிய அனுபவத்தை பெறத் துடித்துக் கொண்டிருந்த தீப்தி கூடிய விரைவில் அடிக்கடி டிஸ்னிலேண்ட் மற்றும் யுனிவர்சல் ஸ்டூடியோவைப் பார்க்கலாம் என்ற கனவில் திளைக்க ஆரம்பித்தார்.